Sunday 9 September 2012

kathal kathai-screwdriver(asok caling asok 1)


அசோக் காலிங் அசோக் 

கொஞ்சம் SCI-FI, கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம், நிறைய காமடியுடன் இந்தக்கதை இருக்கும். ரிமோட்டில் இருக்கும் ரீவைண்ட் பட்டன் போல, லைஃபுக்கும் ஒரு ரீவைண்ட் பட்டன் ஒருவனுக்கு கிடைத்தால்..??? அதை நகைச்சுவையாகவே சொல்ல முற்பட்டிருக்கிறேன். லாஜிக் என்பதை மருந்துக்கு கூட எதிர்பாராதீர்கள்..!! ஜாலியாக படித்துவிட்டு, உடனே மறந்து விடக் கூடிய ஒரு டைம் பாஸ் கதையாக இருக்கும்..!! நகைச்சுவை விரும்புவர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்..!! படித்து முடித்ததும் பிடித்திருக்கிறதா என்றும் எனக்கு சொல்லுங்கள்.. நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்


அசோக் காலிங் அசோக்

எபிஸோட் - I

சூரியபகவான் டென்ஷனாகி கொதித்துக் கொண்டிருந்தார். காலையிலிருந்து நடுவானம் வரை நகர்ந்து வந்திருந்தவர், தன் உச்சபட்ச உக்கிரத்தை உலகிடம் காட்டிக் கொண்டிருந்தார். சித்ரலேகா (ஐந்து மாதமாக என் ஆசைக்காதலி) ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டிருந்தாள். நான் (அவளது ஆசைக்காதலன் வீணாப்போன அசோக்) பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனது இரண்டு கைகளாலும் அவளது இடுப்பை இரண்டு புறமும் பிடித்திருந்தேன். சித்ரலேகாவுக்கு சிறுத்த சிக்கென்ற இடுப்பு..!! ஆனால்.. இடுப்புத்தான் சிறுத்துப் போயிருக்குமே ஒழிய, முன்புறமும் பின்புறமும்… ம்ம்ம்ம்.. போங்க பாஸ்.. எனக்கு வெக்கமா இருக்கு..!!

அடித்த வெயிலுக்கு எனது உடம்பில் வியர்வை ஊறி கசகசத்தது. எனது வியர்வைதான் கசகசப்பாய் தோன்றியதே ஒழிய, எனக்கு முன்னால் அமர்ந்திருந்த லேகாவின் வியர்வை கவர்ச்சியாகவே என் கண்களுக்கு காட்சியளித்தது. சுடிதார் மறைக்காத அவளது முதுகில், முத்து முத்தாய் வியர்வை துளிகள் பூத்திருந்தன. சூரியக்கதிர்கள் அந்த வியர்வை முத்துக்களில் பட, வைரச் சிதறல்களாய் அவை மின்னின.

நான் என் முகத்தை அவளது முதுகுக்கு அருகில் எடுத்து சென்றேன். மூக்கை அந்த வியர்வை துளிகளுக்கு அருகில் வைத்து ஆழமாக சுவாசித்தேன். இவளுடைய வியர்வை கூட இவ்வளவு வாசமாயிருக்கிறதே என்று வியந்தேன். நான் அந்தமாதிரி வாசம் பிடித்துக் கொண்டிருக்கும்போதே, லேகா எரிச்சலாக சொன்னாள்.

"ப்ச்.. முதுகு அரிக்குதுன்னு இப்போ உன்கிட்ட சொன்னேனா..? சொறியுற..?"

"இல்ல.. எனக்கு மூக்கு அரிச்சுது லேகா.. அதான்.."

"ம்ம்ம்ம்... ஒன்னும் வேணாம்.. கொஞ்சம் தள்ளி உக்காரு..!! ஏற்கனவே நீ என் இடுப்பை புடிச்சிருக்குறதே எனக்கு ஒரு மாதிரி இருக்கு..!!"

"ஏய்.. என்ன.. சும்மா இடுப்பை புடிச்சதுக்கே இப்படி சலிச்சுக்குற.. அவன் அவன் லவ் பண்ற பொண்ணை.. எதை எதையோ புடிக்கிராணுக..?"

"எதை புடிக்கிராணுக..?"

"நான் புடிச்சுடுவேன்.. உன் ஸ்கூட்டி புதுசா இருக்கேன்னு பாக்குறேன்.."

"புடிக்கிறதுக்கும் புது ஸ்கூட்டிகும் என்ன சம்பந்தம்..?"

"நான் புடிச்சதும் நீ ஷாக்காகி.. ஸ்கூட்டியை கொண்டு போய்.. முன்னாடி போற லாரிக்கு முத்தம் கொடுத்துட்டேன்னா..? அப்புறம் உன் ஸ்கூட்டிக்கு மூக்கு சப்பையாயிடும்..!! பரவாலையா.. புடிக்கவா..?"


"அடச்சீய்.. தள்ளி உக்காரு அசோக்.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் புடிச்சுக்கலாம்..!!"

அவள் அந்த மாதிரி எரிச்சலாக சொல்ல, நானும் சற்று கடுப்பானேன். அவளுடைய இடுப்பில் இருந்த கைகளை மெல்ல விலக்கிக் கொண்டேன். முகத்தை திருப்பி சாலையில் போகிற வருகிற வாகனங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு ஐந்து வினாடிகள் கூட ஆகியிருக்காது. லேகா ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள். தலையை என்பக்கமாக திருப்பியவள், ஹெல்மட் க்ளாஸை மேலே ஏற்றி விட்டுக் கொண்டாள். காதலும், போதையும் கலந்த மாதிரியான ஒரு குரலில் சொன்னாள்.

"மத்ததைத்தான கல்யாணத்துக்கு அப்புறம் புடிச்சுக்கலாம்னு சொன்னேன்..? இடுப்பை இப்போ புடிச்சுக்கோ.. பரவால.."

சொல்லிவிட்டு அவள் அழகாக புன்னகைக்க, இப்போது நானும் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தேன். இரண்டு கைகளாலும் அவளது இடுப்பை இறுகப் பற்றினேன். அவள் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து, மிதமான வேகத்தில் செலுத்தினாள். இந்த மாதிரி காதலியின் பின்னால் அமர்ந்து கொண்டு, வண்டியில் பயணம் செய்வதே இணையில்லா இன்பம் என்று தோன்றியது. அவளது இடுப்பை பிடித்துக் கொண்டு.. சாலையின் மேடு பள்ளங்களுக்கு அவள் மேலே சாய்ந்துகொண்டு.. எப்போதடா சடன் ப்ரேக் அடிப்பாள் என்று ஏங்கிக்கொண்டு..!! சுகமான பயணம்..!!

இப்போது எதற்கு இந்த சுகப்பயணம் என்று தெரிந்து கொள்வதற்கு முன், கொஞ்சம் என்னைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நான் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் மூன்றாமாண்டு படிக்கிறேன். லேகாவை எனக்கு ஒரு வருடமாகத்தான் தெரியும். வேறொரு கல்லூரியில் இரண்டாண்டுகள் படித்திருந்தவள், அங்கிருந்து ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு, போன வருடம் எங்கள் கல்லூரியில் வந்து சேர்ந்தாள். 

அவள் வந்த முதல் நாளன்று.. என்றைக்கும் எனக்கு அருகே அமர்ந்திருக்கும் ஏழுமலைக்கு, அன்று அதிர்ஷ்டவசமாக வாந்தி பேதி புடுங்கிவிட, காலியாக இருந்த இருக்கையில் இந்த தேவதை வந்து அமர்ந்தாள். ஹலோ சொன்னாள். கை குலுக்கினாள். 

அடுத்த நாள் வந்து, 'என் இடம்..' என்று ஏக்கமாக சொன்ன ஏழுமலையை நான் எட்டி எட்டி உதைத்து விரட்டினேன். எனக்கு அருகிலேயே லேகாவுக்கு நிரந்தர இடம் ஒன்று அமைத்துக் கொண்டேன். அவளுடைய மனதுக்குள்ளும் எனக்கு ஒரு நிரந்தர இடம் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டேன்.

லேகா கூடிய விரைவிலேயே என்னிடம் மயங்கினாள். என்னுடைய அழகு (சிலர் என் முகத்தில் காறித் துப்பியிருக்கிறார்கள்.. அது இந்த கதைக்கு தேவையில்லாதது..), என்னுடைய அறிவு (எட்டே எட்டு அரியர்தான்..), என்னுடைய வீரம் (பல்லியைப் பாத்தா மட்டும் கொஞ்சம் பயம்..), என்னுடைய நகைச்சுவை உணர்வு (மொக்கைச்சாமி என்று எனக்கு ஒரு பட்டப் பெயர் கூட உண்டு..)..!! இதெல்லாம் பார்த்து லேகா என்னிடம் சொக்கிப் போனாள். ஐந்து மாதங்கள் முன்பு, நான் இல்லாவிட்டால் அவளுக்கு வாழ்க்கையே இல்லை என்று என் காலில் விழுந்து கதறினாள் (ஹலோ.. அதான் பொய் சொல்றேன்னு தெரியுதுல.. அடுத்த பாரா போங்க.. ப்ளீஸ்..). நானும் 'போ.. போ.. பொழைச்சுப்போ..' என்று அவளை காதலிக்க ஒத்துக் கொண்டேன் (ம்ம்ம்ம்.. சொன்னா கேட்க மாட்டீங்களா..?).

இப்போது என்னுடைய பேக்ரவுண்டு (ஹலோ.. இதெல்லாம் உண்மைதாங்க..). நான் பிறந்தது கடலூருக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். விவசாயம்தான் எங்கள் குலத்தொழில். அம்மா, அப்பாவுக்கு ஒரே பிள்ளை. 'அறிவு கெட்டவள்' என்று அப்பாவிடம் அடிக்கடி திட்டு வாங்கினாலும், அம்மா மிகவும் அன்பான பெண்மணி. அவளுக்கு வாழ்க்கையில் மிகவும் பிடித்தமான ஹாபியே.. ஒப்பாரி வைப்பதுதான்..!!

டிவி சீரியல் மூலம் அழுவது பத்தாதென்று, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கண்ணீர் கொட்ட காத்திருப்பாள். சோறு கேட்டு வரும் பிச்சைக்காரனிடம் கூட, அவன் பிச்சைக்காரனான சோக கதையை கேட்டு, ஒரு பாட்டம் அழுது, மூக்கை சிந்திப் போட்டுவிட்டுத்தான் சாதத்தை தட்டில் போடுவாள்..!! என்னுடைய அப்பா... ம்ஹூம்.. அந்த ஆளைப் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். இப்போது லேகாவே அவரைப் பற்றி கேவலமாக சொல்வாள். கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..!!

"உன் அப்பா ஏண்டா இப்படி ஒரு கஞ்சப் பிசினாரியா இருக்காரு..?"

"என்ன பண்றது லேகா.. அப்பன் அமைவதெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம்.."

"ம்ம்ம்.. இந்தக்காலத்துலலாம் ஒரு கொழந்தை பொறந்த உடனே.. அதுக்குன்னு ஒரு செல்போன் வாங்கிடுறாங்க.. அதுவும் 'தத்தக்கா.. பித்தக்கா..'ன்னு தாத்தா பாட்டிகிட்டலாம் பேசுது..!! நீ எஞ்சினியரிங் தேர்ட் இயர் படிக்கிற எருமை மாடு.. இன்னும் இன்லான்ட் லெட்டர்ல பேசிட்டு இருக்குற..!! செல்போன் வாங்கித் தர சொல்லி உன் அப்பாவை கேட்க வேண்டியதுதான..?"

"கேட்டா வாங்கித் தந்தாத்தான..? லெட்டர் இருக்குறப்போ.. செல்போன் எதுக்குன்னு கேக்குறாரு..?"

"லெட்டர்னா போய்ச்சேர ஒருவாரம் ஆகும்.. செல்போன்னா நீ பேசுறதை உடனே அவங்க தெரிஞ்சுக்கலாம்னு சொல்ல வேண்டியதுதான..?"

"சொன்னேன் லேகா..!! 'உடனே தெரிஞ்சுக்க வேண்டிய அளவுக்கு.. நீ என்ன உலக சமாதானம் பத்தியா பேசப்போற..? உருப்புடாத விஷயத்தை பத்தித்தான் பேசப்போற.. அதை நான் ஒரு வாரம் கழிச்சே தெரிஞ்சுக்குறேன்'னு சொல்றார்.."

"ஓஹோ..?? என் ஃப்ரண்ட்ஸ் எல்லாருமே செல்போன் வச்சிருக்காங்க.. எனக்கும் ஆசையா இருக்குப்பான்னு சொல்லிப் பாக்க வேண்டியதுதான..?"

"சொன்னேன்.. அதுக்கு அவரு.. 'என் ஃப்ரண்ட்ஸ்லாம் பசங்களை பன்னி மேய்க்க அனுப்பிருக்கானுக.. நீயும் பன்னி மேய்க்க போறியா'ன்னு கேக்குறாரு.."

"ஐயையே..!! சரி சரி விடு.. அவரு உனக்கு வாங்கித் தர வேணாம்.. நானே உனக்கு வாங்கித் தர்றேன்..!! லவ் பண்ண ஆரம்பிச்சு அஞ்சு மாசமாச்சு.. செல்போன் இல்லாம உன்னை லவ் பண்றது ரொம்ப செரமமா இருக்கு அசோக்..!! என் ப்ரண்ட்ஸ்க வேற.. 'உன் ஆளு ஓடஃபோன் யூஸ் பண்ணுறாரா.. ஓடாதஃபோன் யூஸ் பண்ணுறாரா..'ன்னு ரொம்ப கிண்டலடிக்கிறாளுக.." அவள் சோகமாக சொன்னாள்.

"யாரு.. அந்த சோடாபுட்டி ஷோபனாவா..?"

"ம்ம்ம்... அவளும் ஆர்த்தியும்..!!"

"ஓடஃபோன் இல்ல.. ஏர்செல்னு சொல்ல வேண்டியதுதான..?"

"சொன்னேன்.. 'என்னது பார்சலா'ன்னு கேக்குறாளுக..? விட மாட்டேன்றாளுக..!!" 

"ம்ம்ஹ்ஹ்ம்ம்... அவளுகளுக்குலாம் என்னை மாதிரி ஒரு அப்பன் அமைஞ்சிருந்தா இப்படிலாம் கிண்டல் பண்ண மாட்டாளுக.. இருக்கட்டும் இருக்கட்டும்.. எல்லாத்துக்கும் அனுபவிக்கத்தான் போறாளுக.. ஏதாவது கஞ்ச பிசினாரிதான் அவளுகளுக்குலாம் ஹஸ்பண்டா வரப் போறானுக.. நீ வேணா பாரு.."

சொல்லிவிட்டு நான் அமைதியானேன். ச்சே.. என் நிலைமை எவ்வளவு கேவலமாகி விட்டது..? பல்லி மாதிரி இருப்பவள்கள் எல்லாம் என்னைப் பார்த்து பழிப்பு காட்டுகிறார்கள். எல்லாம் என் பாழாப்போன தகப்பனால் வந்தது.

அடுத்த ஐந்தாவது நிமிடம், லேகா அந்த செல்போன் ஷோரூம் முன்பாக வண்டியை நிறுத்தினாள். பெரிய ஷோ ரூம்..!! வெளிப்புறம் க்ளாஸ்களால் மூடப்பட்டிருக்க, கடையின் உட்புறம் வெளியே பளிச்சென்று தெரிந்தது. உள்ளே நுழைந்தோம். எந்தப்பக்கம் திரும்பினாலும் செல்போன்கள்..!! எல்.ஜிக்கள்.. நோக்கியாக்கள்.. சாம்சங்குகள்.. சோனி எரிக்சன்கள்..!! கூலி வேலை பார்ப்பவர்கள் வாங்கும் டப்பாஃபோன்கள் முதல், காரில் வருபவர்கள் வாங்கிச் செல்லும் ஐஃபோன்கள் வரை..!!

'வாங்க சார்..' என ஆங்கிலத்தில் முகம் முழுதும் சந்தோஷமாய் அழைத்தவனிடம் சென்றேன். நான் 'அதை காட்டுங்க.. இதை காட்டுங்க.. இதை அதுல போட்டுக்காட்டுங்க..' என்று அவனை டார்ச்சர் செய்ய, கொஞ்ச நேரத்திலேயே அவன் முகம் கொரங்கு மாதிரி ஆனது. கடுப்புடனே ஒவ்வொன்றாக எனக்கு எடுத்து காட்டினான். லேகா எனக்கு அருகே கைகட்டி, வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 

சாம்சங் கேலக்ஸி சீரிஸில் ஒரு மொபைல் எனக்கு பிடித்திருந்தது. கொஞ்ச நேரம் அதை திருப்பி திருப்பி.. உருட்டி புரட்டி.. அமுக்கி ஆராய்ந்து விட்டு எடுத்துக் கொள்வதாக சொன்னேன். விலை கேட்டேன். அவனும் சொன்னான். அப்படியே திரும்பி, வாயெல்லாம் பல்லாக லேகாவிடம் விலையை சொன்னேன்.

"ஜஸ்ட் ட்வெண்ட்டி செவன் தவுசண்ட் லேகா.. எடுத்துக்கவா..?"

அவள் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் என் முகத்தையும், என் கையில் இருந்தே செல்போனையுமே மாறி மாறி பார்த்தாள். 'பார்த்தாள்' என்று கூட அதை சொல்லக் கூடாது என்று நினைக்கிறேன். முறைத்தாள்..!! ஒரு ஐந்தாறு வினாடிகள்..!! அப்புறம் என் கையிலிருந்த செல்போனை பிடுங்கி, அந்த ஆளிடம் கொடுத்தாள். என் இடது கையை பற்றி, அந்த ஷோ ரூமுக்குள்ளேயே, ஆளில்லாத ஒரு மூலைக்கு, தரதரவென என்னை இழுத்து சென்றாள்.

நானும் பரபரப்பாக அவளை ஃபால்லோ செய்தேன். அந்த மூலைக்கு சென்றதும், சுற்றும் முற்றும் பார்த்தேன். கண்களை சுழற்றி பரபரப்பாக எதையோ தேடினேன். இப்போது லேகா குழம்பிப்போனாள். எதுவும் புரியாமல், என் புஜத்தை கீறிக்கொண்டே கேட்டாள்.

"டேய்.. என்ன தேடுற..?"

"ச்சே.. இங்க ஒரு எடமும் இல்ல.." நான் சலிப்பாக சொன்னேன்.

"எடமா..? என்ன எடம்..??"

"மறைவான எடம்.. முத்தம் கொடுக்கத்தான இப்போ அவசர அவசரமா என்னை இழுத்துட்டு வந்த..?" நான் அப்பாவியாய் கேட்க, அவள் டென்ஷன் ஆனாள்.

"அடச்சேய்..!! நெனைப்பை பாரு.. இவரு பெரிய மன்மதக்குஞ்சு.. இவரு செல்போன் செலக்ட் பண்ற அழகுல மயங்கி.. முத்தம் கொடுக்க இழுத்துட்டு வர்றாங்க..!! முத்தமாம் முத்தம்.. மூஞ்சில அப்படியே போட்டன்னா..?"

"ஏன் லேகா திட்டுற..?"

"பின்ன..??? ஏண்டா.. உனக்குலாம் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையாடா..?" அவள் இப்போது பரிதாபமாக கேட்டாள்.

"என்ன சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியலை.."

"அவன் அவன் லவ் பண்ற பொண்ணை.. அஞ்சு பைசா கூட செலவழிக்க விட மாட்டேன்றாணுக..!! நீ என்னடான்னா.. உன்னை லவ் பண்ணுன இந்த அஞ்சு மாசத்துல.. எனக்கு இருபத்தாஞ்சாயிரம் செலவு இழுத்து வச்சிருக்க..!! இப்போ இன்னொரு இருபத்தேழாயிரத்துக்கு வேட்டு வைக்க ப்ளான் பண்ணுற..? கொஞ்சம் கூட உனக்கு மனசாட்சியே இல்லையா..?"

"என்ன லேகா நீ..? லவ்ஸ்ல போய் அக்கவுண்ட்ஸ்லாம் பாக்குற..??"

"அக்கவுன்ட்ஸா..? இதுக்கு பேரு அக்கவுன்ட்ஸா..?? அக்கவுண்ட்ஸ்னா வரவும் இருக்கணும், செலவும் இருக்கணும்.. அதுக்கு பேருதான் அக்கவுண்ட்ஸ்..!! செலவு மட்டுமே இருந்தா.. அதுக்கு பேரு அக்கவுண்ட்ஸ் இல்ல.. அட்ராசியஸ்..!!"
"ரொம்ப சலிச்சுக்காத லேகா..!! எனக்கு மட்டும் உனக்கு செலவு பண்ணனும்னு ஆசை இல்லையா..? என்ன பண்றது.. எல்லாம் என் நெலமை..!! உன் அப்பா ஒரு இண்டஸ்ட்ரி ஓனரு.. என் அப்பா ஒரு இத்துப் போனவரு.. "

"அதனால..?"

"உன் அப்பாதான் உனக்கு செலவுக்கு எக்கச்சக்கமா காசு கொடுக்குறாருல..? அதான் உன்னை செலவு பண்ண சொல்றேன்.."

"ப்ச்.. முன்னமாதிரிலாம் இல்ல அசோக்..!! ரெஸஸன்.. காஸ்ட் கட்டிங்னு என் பாக்கெட் மணிலயும் கை வச்சுட்டாரு..!! ரொம்ப கஷ்டத்துல இருக்குறேண்டா..!! சத்தியமா சொல்றேன்.. எங்கிட்ட அவ்வளவு பணம்லாம் இல்ல..!!"

"அப்புறம்..? எவ்வளவு வச்சிருக்க..?"

"ஒரு நாலாயிரம் இருக்கு.. அதுக்குள்ளே ஒரு ஃபோன் ச்சூஸ் பண்ணிக்கோடா..!! ப்ளீஸ்.. என் செல்லம்ல..??" அவள் கெஞ்சினாள்.

"நாலாயிரமா..? நாய் புடிக்கிறவன்லாம் இப்போ நாலாயிரம் ரூபா செல்போன் வச்சுட்டு சுத்துறான் லேகா.. நான் வச்சுக்கிட்டா நல்லாவா இருக்கும்..??" நான் மிஞ்சினேன்.

"அதுலாம் நல்லாத்தான் இருக்கும்..!! இப்போதைக்கு இதை வாங்கிக்கோ.. அடுத்த வருஷம் நான் உனக்கு ஆன்ட்ராய்ட் ஃபோன் வாங்கித் தர்றேன்..!! சரியா..?"

"சத்தியமா..??"

"சத்தியமா வாங்கித் தர்றேன்.. இப்போதைக்கு இதை வாங்கிக்கோ..!! ப்ளீஸ் அசோக்..!!"

அவள் பரிதாபமாக கெஞ்ச, எனக்கும் அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்ல மாட்டாள். நிஜமாகவே பணம் இல்லை போலிருக்கிறது. இதற்கு மேலும் மிஞ்சினால், இந்த நாலாயிர ரூபாய் ஃபோனும் கிட்டாமல் போக வாய்ப்பிருக்கிறது. வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டேன். அதே சாம்சங்கில் வேறொரு ஃபோன் வாங்கிக் கொண்டேன். வெளியே வந்ததும் லேகா கேட்டாள்.

"சரிடா.. நான் உன்னை ட்ராப் பண்ணவா..? இல்ல.. நீயா ஆட்டோ புடிச்சு உன் ரூமுக்கு போயிக்கிறியா..?"

அவள் பரபரப்பாக கேட்க, நான் பதட்டமே படாமல் தலையை சாய்த்து சூரியனை பார்த்தேன். மணிக்கட்டை திருப்பி ஒரு முறை பார்த்தேன் (இதுவரை நான் வாழ்க்கையில் வாட்சே கட்டியதில்லை என்பது வேறு விஷயம்.. இருந்தால்தானே கட்டுவதற்கு..?) அப்புறம் புதிதாக வாங்கிய அந்த செல்போனையே அமுக்கி மணி பார்த்தேன். முகமெல்லாம் சிரிப்புடன் லேகாவிடம் சொன்னேன்.

"லஞ்ச் டைம் ஆயிடுச்சு போல இருக்கு லேகா.. எங்கயாவது சாப்பிட்டு போயிடலாமா..?"

நான் படுகேஷுவலாக அப்படி கேட்க, லேகாவின் முகமோ படு கலவரத்துக்கு போனது. பிட் அடித்து மாட்டிக் கொண்டவள் மாதிரி திருதிருவென விழித்தாள். அவஸ்தையாக நெளிந்தாள். பேதி மாத்திரை சாப்பிட்டுவிட்டு, வெயிட்டிங்கில் இருப்பவள் போல காணப்பட்டாள். அவளுடைய திருட்டு முழியை பார்த்து நான்தான் திரும்பவும் கேட்டேன்.

"ஏய்.. என்னாச்சு.. முழிக்கிற..?"

"கா...காசு இல்லடா.." லேகா பரிதாபமாக சொன்னாள்.

"என்னது..???" நான் சற்று குரலை உயர்த்த,

"காசு இல்லடா..!!!!" அவளும் சத்தமாக சொன்னாள்.

"காசு இல்லையா..? எங்க பர்சை கொடு.. பாக்கலாம்.." சொல்லிக்கொண்டே நான் அவளுடைய பர்சை பறிக்க,

"ஐநூறு ரூபாதான் இருக்கு.." அவள் அவசரமாக சொன்னாள்.

"ஐநூறு ரூபா இருக்குல.. அது போதும்.. வா..!! அதுக்குள்ளே அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்குறேன்..!!"

"ஐயோ.. இதை வச்சுத்தான் இன்னும் ஒரு வாரத்துக்கு ஓட்டனும்டா.. ப்ளீஸ்டா அசோக்..!!"

"ப்ச்.. பசிக்கிற நேரத்துல பணத்தைப் பத்தி பொலம்பாத லேகா.. வா..!! அந்த சோடா புட்டி கிட்ட கடன் வாங்கிக்கோ.. நான் சொன்னேன்னு சொல்லு.. கொடுப்பா..!!"

"நீ சொன்னேன்னு சொன்னா.. பணம் கெடைக்காது.. வேற ஏதாவதுதான் கெடைக்கும்.."

"வேற எதாவதுனா..?"

"செருப்பு.. வெளக்குமாரு.. 'அவனை தலை முழுகித் தொலை'ன்னு வண்டி வண்டியா அட்வைஸ்..!!"

"ப்ச்.. அவளுக சொல்ற பேட் அட்வைஸ்லாம் கேட்டுக்காத லேகா..!! இப்போ என்ன.. எனக்கு சாப்பாடு வாங்கித் தர முடியுமா..? இல்லையா..?" நான் டென்ஷன் ஆனேன்.

"சரி..சரி.. கத்தாத..!! போகலாம்..!!" அவள் வழிக்கு வந்தாள்.

"தேங்க்ஸ்டா செல்லம்.. ரொம்ப பசிக்குதும்மா.. பிரியாணி சாப்பிடனும்னு ரொம்ப ஆசையா இருக்குது.." நானும் இப்போது குழைந்தேன்.

'ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்.. நீ நார்மலா தின்னாலே நாலு பிரியாணி தின்னுவ.. பசிக்குதுன்னு வேற சொல்ற.. பத்து பிரியாணி வேணுமடா.. என்ன ஆகப் போகுதோ இன்னைக்கு..' என அவள் வாய்க்குள் முணுமுணுத்தது என் காதில் தெளிவாக விழுந்தது. ஆனால் அதை நான் கண்டுகொள்ளவில்லை.

லேகா ஹெல்மட் மாட்டிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய, நான் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டேன். வண்டி கிளம்பியது. மீண்டும் ஒரு சுகப் பயணம்.. அடுத்த பத்து நிமிடங்களுக்கு..!! அப்புறம் அந்த செட்டிநாடு உணவகம் முன்பு வண்டியை நிறுத்தினாள். ஏற்கனவே ஓரிரு முறை நானும் லேகாவும் இங்கே வந்திருக்கிறோம். சாப்பிட்டிருக்கிறோம் (யார் காசில் என்று இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் கதையை ஆரம்பத்தில் இருந்து இன்னொரு முறை வாசித்து விடுங்கள்..) 

இந்த உணவகத்தில் சாப்பாடு நன்றாக இருக்கும். அதே நேரம் அதிக கும்பலும் இராது. மதிய உணவு நேரம் இப்போதுதான் ஆரம்பிக்கிறது என்ற காரணத்தால், அங்கும் இங்கும் என சிலரே அமர்ந்திருந்தனர். நாங்கள் யார் கண்ணிலும் சிக்காத வகையில் ஒரு கார்னர் டேபிள் சென்று அமர்ந்து கொண்டோம். ஆர்டர் எடுக்க வந்த பையனிடம், நண்டு சூப்.. ப்ரான்ஸ் பிரியாணி.. செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் வறுவல்.. ஆர்டர் செய்தோம். பத்து நிமிடம் காத்திருக்க சொல்லிவிட்டு, அவன் நகர்ந்தான்.

காத்திருந்த நேரத்தில்.. சற்று முன் வாங்கிய புது செல்போனை எடுத்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்..!! அதன் அழகில் வாயைப் பிளந்தவாறு.. இரண்டு புறமும் புரட்டி புரட்டி பார்த்தவாறு.. அங்கங்கே இருந்த பட்டன்களை அமுக்கியவாறு.. கை வைத்து தடவி அதன் ஸ்மூத்னசை அறிந்தவாறு.. கவர் ரிமூவ் செய்து உள்ளே என்னவெல்லாம் இருக்கிறது என்று உற்று உற்று பார்த்தவாறு..!! கிட்டத்தட்ட.. புதுப்பொண்டாட்டியை புருஷன் ஆராய்ச்சி செய்வது போல..!! ஹிஹி..!!

"போதும் அசோக்.. விடு.." எனது செய்கையை சகியாமல் லேகா சொன்னாள்.

"ஏன் லேகா..?"

"பின்ன என்ன.. பட்டிக்காட்டான் ஃபாரீன் பிகரை பாத்தது மாதிரி.. அப்டியே ஜொள்ளுவிட்டு செல்போனை பாத்துக்கிட்டு இருக்குற..?"

"ஹ்ஹாஹ்ஹா.. போ லேகா..!! ம்ம்ம்.. என் ஃபோன் ரொம்ப அழகா இருக்குல..?"

"ம்ம்.. உனக்கு புடிச்சிருந்தா சரிதான்.."

"எனக்கு புடிச்சிருக்கு..!! அதுசரி.. ஸிம் எப்போ ஆக்டிவேட் ஆகும்..?"

"ஈவினிங் ஆக்டிவேட் ஆயிடும்னு சொன்னான்.."

"ஓகே ஓகே.."

"இங்க பாரு அசோக்.. ஆக்டிவேட் ஆனதும் மொதல்ல எனக்குத்தான் நீ மெசேஜ் அனுப்பனும்.. மொத கால் எனக்குத்தான் பண்ணனும்.. ஓகேவா..?"

"ஓகே லேகா.. பண்ணிட்டா போச்சு.."

"அப்பாடா..!! ஒரு வழியா இன்னைக்கோட ஒரு பிரச்னை தீரப் போகுது.. இனிமே நைட்லாம் உன்கூட மணிக்கணக்கா கதையடிக்கலாம்..!!"

"ஹாஹா..!! ஆமாம் லேகா.. நெனச்சுப் பாத்தா.. எனக்கும் ஒரே கிளுகிளுப்பாதான் இருக்கு..!!"

"டெயிலி நைட்டு நான் ஃப்ரீ ஆனதும்.. உனக்கு மிஸ்ட் கால் கொடுக்குறேன்.. நீ திரும்ப எனக்கு கால் பண்ணி பேசு.. ஓகேவா..?" அவள் கூலாக சொல்ல,

"என்னது மிஸ்ட் காலா..? ம்ஹூம்.. அதெல்லாம் வேலைக்காவாது.. நீயே கால் பண்ணிடு லேகா.." நான் பதறினேன்.

"அய்யோ.. கஞ்சூஸ்..!! காசுக்காக பாக்காத.. டெயிலி நான் உன் நம்பருக்கு டாப்பப் பண்ணிடுறேன்.. மிஸ்ட் கால் வந்தா நீயே கால் பண்ணு.. ஓகேவா..?"

"ஓ..!! டாப்பப் பண்ணிடுறியா.. அப்போ டபுள் ஓகே..!! ஆமாம்.. என் நம்பருக்கு டாப்பப் பண்ணி மிஸ்ட் கால் கொடுக்கிறதுக்கு பதிலா.. உன் நம்பருக்கு டாப்பப் பண்ணி.. நீயே பேசிடலாம்ல..?"

"ப்ச்.. அதுலாம் உனக்கு புரியாது.. இதுலாம் பொண்ணுங்களுக்கு ஒரு ஈகோ.."

"என்ன ஈகோ..??"

"ம்ம்ம்ம்.. 'பாருடி.. நான் மிஸ்ட் கால் கொடுத்தா.. என் ஆளு அவரே கால் பண்ணி விடிய விடிய என்கூட பேசுவாரு' அப்டின்னு என் ப்ரண்ட்ஸ்கிட்டலாம் நான் பெருமையா சொல்லிக்குவேன்.."

'த்தூ.. இப்படி ஒரு கேவலப்பட்ட பொழப்பு உனக்கு தேவையா..?' என்று லேகாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவளுடைய இந்த கேவலப்பட்ட பொழப்பிற்கு காரணமே நான்தான் என்ற உண்மை உறைத்ததும், வாயை இறுக மூடிக் கொண்டேன். பேச்சை மாற்றும் எண்ணத்துடனும், வேறு மாதிரி எண்ணம் மனதில் தோன்றியவனாகவும் கொஞ்சலான குரலில் அவளை அழைத்தேன்.

"லேகா.."

"ம்ம்ம்.."

"லேகா..!!!"

"சொல்லுடா...!!!!"

"நீ எனக்கு மொபைல் வாங்கிக் கொடுத்தேல..?"

"ம்ம்.."

"அதுக்கு நான் பதிலுக்கு ஏதாவது பண்ணனும் போல இருக்கு.."

"ச்சே.. இதுல என்ன இருக்குடா..? யாரோ ரோட்ல போற பிச்சைக்காரனுக்கா நான் மொபைல் வாங்கிக் கொடுத்தேன்.. என் பாய் ஃப்ரண்டுக்குத்தான..? அதெல்லாம் ஒன்னும் வேணாம் விடு.."

ஒருவேளை அவள் என்னைத்தான் பிச்சைக்காரன் என்று மறைமுகமாக சொல்கிறாளோ என்று கூட எனக்கு ஒரு சின்ன டவுட் வந்தது. ஆனால் காதல் மயக்கத்தில் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை நான்.

"என்னதான் இருந்தாலும்..?? உன்னை மாதிரி கேர்ள் பிரண்ட் கிடைக்க நான் எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும் தெரியுமா..?? எனக்காக எவ்வளவு செலவு பண்ணிருக்க நீ..?? கண்டிப்பா உனக்காக நான் ஏதாவது பண்ணியே ஆகணும்.. இல்லனா.. எனக்கு மனசு உறுத்திக்கிட்டே இருக்கும்.."

"ப்ச்.. அதான் எதுவும் வேணாம்னு சொல்றேன்ல அசோக்..?"

"நோ நோ.. நான் கொடுக்குறதை நீ வாங்கித்தான் ஆகணும்.. இல்லனா நான் மனசு உடைஞ்சு போயிடுவேன்.."

"ம்ம்ம்ம்.. சொன்னா நீ கேட்க மாட்ட..? சரி.. அப்படி என்ன பதிலுக்கு பண்ணப் போற..?"

அவள் கேட்டதும் நான் பட்டென அமைதியானேன். கண்களில் உடனடியாய் ஒரு செயற்கை போதையை வரவழைத்துக் கொண்டு, அவளையே குறுகுறுவென பார்த்தேன். உதட்டை ஒருமாதிரி மடித்து, நாவால் நக்கிக் காட்டினேன். பின்பு அந்த உதடுகளை குவித்து வைத்தவாறு, அவளிடம் சொன்னேன்.

"உனக்கு ஒரு உம்மா கொடுத்து.. உன்னை சந்தோஷப்படுத்தப் போறேன்.." நான் காதலுடன் சொல்ல, அவளோ கடுப்புடன் கத்தினாள்.

"செருப்பு..!!!"
"என்ன லேகா திட்டுற..??"

"பின்ன என்ன..? ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க ட்ரை பண்ணுறியா..? செல்போன் பத்தாதுன்னு.. இப்போ என் உதட்டை வேற கடிச்சு வைக்க ப்ளான் பண்ணுறியா..? ஒன்னும் வேணாம் போ.."

"ச்சேச்சே.. அன்னைக்கு மாதிரி கடிக்கலாம் மாட்டேன்.. சும்மா.. லைட்டா.. வச்சுட்டு எடுத்துடுறேன்.. ஓகேவா..?"

"ப்ச்.. சும்மா மூடிட்டு உக்காரு அசோக்.. யாராவது பாத்துடப் போறாங்க..?"

"யாரு பாக்கப் போறா..? உக்காந்திருக்குறதே ரெண்டு மொண்ணை நாயிங்க.. அதுங்களும் வெறி புடிச்ச மாதிரி சிக்கனை கடிச்சு குதறிட்டு இருக்குதுங்க.. அதுங்க எங்கே நம்மளைலாம் பாக்கப் போகுதுங்க..? வா லேகா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.."

"வேணான்னு சொல்றேன்ல.. விடு.."

"என்ன நீ.. என்னவோ கிஸ் பண்றதே புடிக்காத மாதிரி ஆக்டிங் குடுக்குற..?"

"நான் புடிக்காதுன்னு சொல்லல.. ஆனா கிஸ் பண்றதுக்கு நீ ஒரு காரணம் சொன்னியே.. அதைத்தான் என்னால சகிச்சுக்க முடியலை.."

"என்ன சொன்னேன்..?"

"ம்ம்ம்ம்... என்னவோ நான் உன் கிஸ்க்காக தவமா தவம் கெடக்குற மாதிரியும்.. அதுக்காகத்தான் இருபத்தொம்பதாயிரம் உனக்கு செலவு பண்ணின மாதிரியும்ல சொல்ற..?" 

அவ்வளவு கோவத்திலும் அவள் அக்கவுன்ட் சரியாக மெயின்டெயின் செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி அவள் உஷ்ணமானதில், நான் சற்று மிரண்டுதான் போனேன். ஆனால் அவளுடைய உதட்டைக் கவ்வி உறிஞ்சும் ஆசை என் மனதில் எக்கச்சக்கமாய் ஏறியிருந்தது. வேறு வழியில்லாதது போல தோன்றவும், வெட்கம் விட்டு கெஞ்ச ஆரம்பித்தேன்.

"ஸாரி ஸாரி ஸாரி.. சாரிடா செல்லம்.. நான் அப்படி சொல்லிருக்க கூடாது.. தப்புத்தான்..!! அதுக்காக கிஸ் முடியாதுன்னு சொல்லிடாத.." அவளும் இப்போது சற்று மனம் இறங்கினாள்.

"ம்ம்ம்ம்.. அது..!! கிஸ் வேணும்னா இப்படி கெஞ்சிக் கேக்கணும்.. புரியுதா..? அதிகாரம்லாம் பண்ணக் கூடாது..!!"

"ஓகே ஓகே.. இனிமே இப்படிலாம் அதிகாரம் பண்ணல.."

"சரி.. இங்க வேணாம்.. வெளில எங்கயாவது போயிடலாம்.."

"நோ நோ.. எனக்கு இப்போவே வேணும்.."

"ப்ச்.. இது பப்ளிக் ப்ளேஸ்டா.."

"பரவால.. யாரும் நம்மள நோட் பண்ணல.. வா லேகா.."

நான் சொல்லவும், லேகா இப்போது அவஸ்தையை நெளிந்தாள். விழிகளை சுழற்றி சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்காங்கே கிடந்த இரு டேபிள்களில், அவரவர் இலைகளில் கிடந்ததிலேயே முழுக்கவனமும் இருந்தவர்களை பார்த்ததும், முத்தத்திற்கு ஓரளவு தயாரானவள் போல காணப்பட்டாள். எனக்கும் இதுதான் சரியான சந்தர்ப்பம் என தோன்றவே, சட்டென பாய்ந்து சென்று அவளது செவ்விதழ்களை கவ்விக் கொண்டேன். 'சர்ர்ர்..' என உறிஞ்சினேன்.

என்னுடைய இரண்டு கைகளும் லேகாவுடைய பட்டுக் கன்னங்களை தடவிக் கொண்டிருந்தன. எனது இரு உதடுகளும் அவளுடைய உதடுகளை இறுகக் கவ்வி சுவைத்தன. முத்தத்தில் கிடைத்த சுகத்தில் லேகாவுக்கு கண்கள் செருகிக் கொண்டன. சட்டையோடு சேர்த்து என் மார்பை கொத்தாகப் பற்றி பிசைந்தவாறு, சத்தமே போடாமல் தன் இதழ்களை என் வசம் இழந்திருந்தாள்.

எங்கள் இருவரது உதடுகளும் எசகுபிசகாய் சிக்கிக்கொண்டிருக்க, எங்கள் நாக்குகள் மெல்ல ஒன்றை ஒன்று தீண்டிப் பார்த்தன..!! தடவின..!! மாற்றி மாற்றி எச்சில் பூசி விளையாடின..!! சும்மா வைத்து எடுக்கிறேன் என்று நான் சொல்லியிருந்தாலும், அவளது உதடுகளை கடித்தே சுவைத்தேன். முடியாது என்று லேகா பிகு பண்ணியிருந்தாலும், முழு ஒத்துழைப்பையும் என் முத்தத்திற்கு வழங்கினாள். நாங்கள் இருவரும் சூழ்நிலை மறந்து, சுவையான முத்தத்தில் கட்டுண்டு கிடந்தோம்.
"என்ன லேகா திட்டுற..??"

"பின்ன என்ன..? ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க ட்ரை பண்ணுறியா..? செல்போன் பத்தாதுன்னு.. இப்போ என் உதட்டை வேற கடிச்சு வைக்க ப்ளான் பண்ணுறியா..? ஒன்னும் வேணாம் போ.."

"ச்சேச்சே.. அன்னைக்கு மாதிரி கடிக்கலாம் மாட்டேன்.. சும்மா.. லைட்டா.. வச்சுட்டு எடுத்துடுறேன்.. ஓகேவா..?"

"ப்ச்.. சும்மா மூடிட்டு உக்காரு அசோக்.. யாராவது பாத்துடப் போறாங்க..?"

"யாரு பாக்கப் போறா..? உக்காந்திருக்குறதே ரெண்டு மொண்ணை நாயிங்க.. அதுங்களும் வெறி புடிச்ச மாதிரி சிக்கனை கடிச்சு குதறிட்டு இருக்குதுங்க.. அதுங்க எங்கே நம்மளைலாம் பாக்கப் போகுதுங்க..? வா லேகா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.."

"வேணான்னு சொல்றேன்ல.. விடு.."

"என்ன நீ.. என்னவோ கிஸ் பண்றதே புடிக்காத மாதிரி ஆக்டிங் குடுக்குற..?"

"நான் புடிக்காதுன்னு சொல்லல.. ஆனா கிஸ் பண்றதுக்கு நீ ஒரு காரணம் சொன்னியே.. அதைத்தான் என்னால சகிச்சுக்க முடியலை.."

"என்ன சொன்னேன்..?"

"ம்ம்ம்ம்... என்னவோ நான் உன் கிஸ்க்காக தவமா தவம் கெடக்குற மாதிரியும்.. அதுக்காகத்தான் இருபத்தொம்பதாயிரம் உனக்கு செலவு பண்ணின மாதிரியும்ல சொல்ற..?" 

அவ்வளவு கோவத்திலும் அவள் அக்கவுன்ட் சரியாக மெயின்டெயின் செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி அவள் உஷ்ணமானதில், நான் சற்று மிரண்டுதான் போனேன். ஆனால் அவளுடைய உதட்டைக் கவ்வி உறிஞ்சும் ஆசை என் மனதில் எக்கச்சக்கமாய் ஏறியிருந்தது. வேறு வழியில்லாதது போல தோன்றவும், வெட்கம் விட்டு கெஞ்ச ஆரம்பித்தேன்.

"ஸாரி ஸாரி ஸாரி.. சாரிடா செல்லம்.. நான் அப்படி சொல்லிருக்க கூடாது.. தப்புத்தான்..!! அதுக்காக கிஸ் முடியாதுன்னு சொல்லிடாத.." அவளும் இப்போது சற்று மனம் இறங்கினாள்.

"ம்ம்ம்ம்.. அது..!! கிஸ் வேணும்னா இப்படி கெஞ்சிக் கேக்கணும்.. புரியுதா..? அதிகாரம்லாம் பண்ணக் கூடாது..!!"

"ஓகே ஓகே.. இனிமே இப்படிலாம் அதிகாரம் பண்ணல.."

"சரி.. இங்க வேணாம்.. வெளில எங்கயாவது போயிடலாம்.."

"நோ நோ.. எனக்கு இப்போவே வேணும்.."

"ப்ச்.. இது பப்ளிக் ப்ளேஸ்டா.."

"பரவால.. யாரும் நம்மள நோட் பண்ணல.. வா லேகா.."

நான் சொல்லவும், லேகா இப்போது அவஸ்தையை நெளிந்தாள். விழிகளை சுழற்றி சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்காங்கே கிடந்த இரு டேபிள்களில், அவரவர் இலைகளில் கிடந்ததிலேயே முழுக்கவனமும் இருந்தவர்களை பார்த்ததும், முத்தத்திற்கு ஓரளவு தயாரானவள் போல காணப்பட்டாள். எனக்கும் இதுதான் சரியான சந்தர்ப்பம் என தோன்றவே, சட்டென பாய்ந்து சென்று அவளது செவ்விதழ்களை கவ்விக் கொண்டேன். 'சர்ர்ர்..' என உறிஞ்சினேன்.

என்னுடைய இரண்டு கைகளும் லேகாவுடைய பட்டுக் கன்னங்களை தடவிக் கொண்டிருந்தன. எனது இரு உதடுகளும் அவளுடைய உதடுகளை இறுகக் கவ்வி சுவைத்தன. முத்தத்தில் கிடைத்த சுகத்தில் லேகாவுக்கு கண்கள் செருகிக் கொண்டன. சட்டையோடு சேர்த்து என் மார்பை கொத்தாகப் பற்றி பிசைந்தவாறு, சத்தமே போடாமல் தன் இதழ்களை என் வசம் இழந்திருந்தாள்.

எங்கள் இருவரது உதடுகளும் எசகுபிசகாய் சிக்கிக்கொண்டிருக்க, எங்கள் நாக்குகள் மெல்ல ஒன்றை ஒன்று தீண்டிப் பார்த்தன..!! தடவின..!! மாற்றி மாற்றி எச்சில் பூசி விளையாடின..!! சும்மா வைத்து எடுக்கிறேன் என்று நான் சொல்லியிருந்தாலும், அவளது உதடுகளை கடித்தே சுவைத்தேன். முடியாது என்று லேகா பிகு பண்ணியிருந்தாலும், முழு ஒத்துழைப்பையும் என் முத்தத்திற்கு வழங்கினாள். நாங்கள் இருவரும் சூழ்நிலை மறந்து, சுவையான முத்தத்தில் கட்டுண்டு கிடந்தோம்.
அரை நிமிடம் அவளுடைய உதட்டுத்தேனை திகட்ட திகட்ட உண்டுவிட்டு திரும்பியபோது... ஆவி பறக்கும் நண்டு சூப்புடனும், ஆவேன பிளந்த வாயுடனும் சர்வர் பையன் நின்றிருந்தான். எதோ பேயிடம் பலமாக அறை வாங்கிவன் மாதிரி அதிர்ந்து போய் அசைவின்றி நின்றிருந்தான். அவ்வளவுதான்..!! லேகா உடனே வெட்கப்பட்டு தலையை கவிழ்ந்து கொண்டாள். எனக்குத்தான் என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்த சர்வரைப் பார்த்து 'ஈஈஈஈ'' என இளித்தபடி, லூசுத்தனமாய் எதோ உளறினேன்.

"அ..அது ஒன்னுல்லப்பா.. அவங்களுக்கு உதட்டுல தூசி விழுந்துடுச்சு.. ஊதி விட்டுட்டு இருந்தேன்.. நீ ஒன்னும் தப்பா நெனச்சுக்காத.."

அப்புறம் அரை மணி நேரம்.. ஆர்டர் செய்த ஐட்டங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்க, நாங்கள் சாப்பிட்டோம். லேகா முத்தமிட்டு மாட்டிக்கொண்ட வெட்கம் நீங்காமல், கொஞ்சம் கொஞ்சமாய் கொறித்தாள். எனக்குத்தான் வெட்கம், கூச்சம் ஒரு எழவும் கிடையாதே..? என் இஷ்டத்திற்கு எல்லாத்தையும் மேய்ந்தேன். அந்த சர்வர் பையன் கொஞ்ச நேரத்திற்கு பித்துப் பிடித்தவன் மாதிரியே சுத்திக் கொண்டு இருந்தான். சூப்பர்வைசரிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கினான். பாவமாக இருந்தது..!!

சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினோம். லேகாவே என்னை எனது ரூம் வரை வந்து ட்ராப் செய்தாள். கிளம்புகையில் கையால் உதட்டை தொட்டு காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட்டு சென்றாள். நானும் அதைப் பிடித்து என் கக்கத்தில் வைத்துக்கொண்டு மாடிப்படியேறி என் அறைக்கு சென்றேன். காலிங் பெல் அடித்துவிட்டு காத்திருந்தேன். கருப்பு நிறமும், கனத்த தேகமும் கொண்ட அந்த பெண்மணி வந்து கதவை திறந்தாள்.

"வா அசோக்கு.. லேகா பாப்போவோட ஊர் சுத்தினு வர்றியா..?" அவள் 'ஈஈ' என இளித்தவாறு கேட்க,

"இ..இல்லத்தை.. ஆ..ஆமாத்தை.." என நான் உளறினேன்.

அந்தப்பெண்மணி வேறு யாரும் இல்லை. என் ரூம்மேட் ஜான்சனின் தூரத்து சொந்தம். அத்தை முறை வேண்டும் என்று என்னிடம் சொல்லியிருக்கிறான். இதே ஊரில்தான் இருக்கிறாள். அவ்வப்போது வந்து ஜான்சனை பார்த்துவிட்டு செல்வாள்.

"ஜானியை எங்கத்தை.. ஆளைக்காணோம்.." என்றேன் நான்.

"குளிச்சுட்டு வர்றேன்னு பாத்ரூம் போயிருக்கான் கண்ணு..!! நீ வா.. உக்காரு..!! காபி போடவா..? சாப்பிடுறியா..?"

"இல்லத்தை.. இப்பத்தான் பிரியாணி சாப்பிட்டேன்.. வேணாம்.."

அப்புறம் நானும் ஜானியின் அத்தையும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு ஐந்து நிமிடத்திலேயே ஜானி குளித்துவிட்டு வெளியே வந்தான். அவன் வந்த கொஞ்ச நேரத்தில் அவனுடைய அத்தையும் கிளம்பினாள். அவள் கிளம்பியதும் இவன் டிவி ஆன் செய்து, எம் டிவியில் அலறிய பாடல் ஒன்றுக்கு 'ஏ.. ஏ.. ஏ..' என்று கத்தியவாறு என் அருகில் வந்து அமர்ந்தான். ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. நைசாக என்னிடம் தூண்டில் போட்டுப் பார்த்தான்.

"அப்புறம் மச்சி.. லேகா குட்டி என்ன சொல்லுச்சு..?" அவன் நக்கலாக கேட்க, நான் கடுப்பானேன்.

"த்தா.. இனிமே அவளை குட்டி, பொட்டி, ஜட்டின்னுலாம் சொன்ன.. கடுப்பாயிடுவேன் நான்.."

"ஹேய்.. இப்போ ஏன் டென்ஷன் ஆவுற..? புடிக்கலைன்னா சொல்ல வேண்டியதுதான..? சரி விடு.. இனிமே அப்படி கூப்பிடலை..!! லேகா மேடம் என்ன சொன்னாங்கங்க...?" என்று உடனே அவன் போலி மரியாதை காட்டினான்.

"ஒ..ஒன்னும் சொல்லலை.. சும்மா லஞ்ச் சாப்பிட்டு வந்தோம்.. அவ்ளோதான்.."

"ம்ம்ம்ம்.... பாக்கெட்டு ஏதோ பல்ஜாயிருக்குற மாதிரி இருக்கு.. இன்னாது அது..? எதுனா வாங்கித் தந்தாளா..?"

"ப்ச்.. அதுலாம் எதுக்கு உனக்கு..?"

"ஏய்.. சும்மா சொல்லுடா.. அதை தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்..??"

அவன் கேஷுவலாக கேட்க, நான் அவனை ஏறிட்டு முறைத்தேன். நான் ஏன் முறைக்கிறேன் என்று உங்களுக்கு அவ்வளவாக விளங்காது. அந்த இம்சை எனக்கு மட்டுமே தெரியும். 'அதை தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்' என்று அலட்சியமாக கேட்டான் அல்லவா..? இந்த மாதிரி விஷயங்களை தெரிந்து கொள்ளத்தான் இவன் இந்தப் பிறவியே எடுத்திருக்கிறான். அடுத்தவர்களுடைய ரகசியங்களை அறிந்து கொள்வதில் அப்படி ஒரு ஆர்வம்..!! ஆனால் அவனுக்குள் இருக்கும் ஆர்வம், அவனது குரலில் தெரியாது. இது இரண்டு வருடங்களாக இவன் கூட இருந்ததில் நான் அறிந்து கொண்ட விஷயம்.
ஜானியைப் பற்றி கொஞ்சம் சொல்லுகிறேன். என்னுடைய க்ளாஸ்மேட்தான்..!! ஆள் பார்ப்பதற்கு ஆறடி உயர மாடு மாதிரி இருப்பான். ஆண்ட்ரூ ப்ளிண்டாஃபுக்கு அரைக்கால் டவுசர் மாட்டிவிட்டது மாதிரி காட்சியளிப்பான். முகத்தில் எப்போதுமே ஒரு அலட்சியம். முள் முள்ளாய் தலை முடியும், அதே முள் முள்ளாய் தாடியும்..!! 'முட்டாக்கூ.. கேனைக்கூ.. லூசுக்கூ..' என்று தொண்டைத்தண்ணி வற்றும் அளவிற்கு எவ்வளவு கேவலமாக திட்டினாலும் கூட, 'ஹேஹே.. அப்புறம்..?' என்று கேனைத்தனமாக சிரிக்கக் கூடிய கேரக்டர் அவன். எனக்காவது வெட்கம் மட்டுந்தான் கெடயாது. அவனுக்கு மானம், சூடு, சொரணை என அந்த கேட்டகரியில் வரும் எந்த விஷயமுமே கெடயாது.

அவனைப் பற்றி இந்த அளவு புரிந்து வைத்திருந்தாலும், அவனிடம் எந்த ரகசியத்தையும் என்னால் மறைக்க முடியாது. உளறிக் கொட்டிவிடுவேன். நான் எப்படிப்பட்ட ஓட்டை வாய் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இப்போதும் அப்படித்தான். லேகா செல்போன் வாங்கித் தந்த மேட்டரை கறந்து விட்டான். 'கொடுத்து வச்சவன்டா நீ..' என்றான்.. 'போடா.. கோணப்பூ..' என்று திட்டினேன். 'தண்ணி வாங்கித்தாடா..' என்றான். 'போடா.. சுண்..' என்று திட்டிவிட்டு என் ரூமுக்கு வந்தேன். மெத்தையில் விழுந்தேன். உறங்கிப் போனேன்.

உண்ட பிரியாணிக்கு உறக்கம் உடனே வந்தது. வாயைப் பிளந்தவாறு தூங்கிப் போனேன். மாலை ஐந்து மணி வாக்கில் எழுந்தேன். முகம் கழுவிவிட்டு வெளியே வந்தேன். நானும் ஜானியும் கீழே இருக்கும் டீக்கடை சென்று டீ சாப்பிட்டுக்கொண்டே, புகை விட்டோம். பின்பு மீண்டும் மாடியேறி மேலே வந்தோம். நான் என் அறைக்குள் நுழைந்து கொண்டேன்.

எனக்கு தம்மடிப்பது, தண்ணியடிப்பது, பெண்களிடம் வழிவது என நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன. ஆனால் எனக்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. என்னவென்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். அது.. தினமும் டைரி எழுதுவது..!! கடந்த ஐந்து வருடங்களாக இதை நான் செய்து வருகிறேன். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது, எஸ்தர் என்ற அழகான டீச்சர் கேட்டுக்கொண்டதற்காக ஆரம்பித்த பழக்கம். அதுமட்டுமில்லாமல் எழுதிய டைரிகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். அவ்வப்போது அதை எடுத்து, எப்போதோ நான் செய்த கோணங்கித்தனங்களை படித்து ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஹாபி..!!

ரூமுக்குள் நுழைந்ததுமே எனது இந்த வருட டைரியை எடுத்துக்கொண்டு மெத்தையில் படுத்தேன். இன்று நடந்தவற்றை பற்றி எழுத ஆரம்பித்தேன். 'அன்புள்ள டைரி.. இன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.. என்னுடைய முதல் செல்போனை இன்றுதான் நான் வாங்கினேன்..' நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே,

"ஆமாம்.. இவரு பெரிய ஆளவந்தான் கமலஹாசன்.. டைரியை லவ்வாங்கி பண்றாரு..!!"

சத்தம் கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன். 'ஈஈ..' என்று இளித்தவாறு ஜானி நின்றிருந்தான். தன் வலது கையால் ஷார்ட்சுக்குள் இருந்த தன் தம்பியை பிடித்து கசக்கியவாறு நின்றிருந்தான். எனக்கு எப்படி டைரி எழுதுவது ஒரு ஹாபியோ.. அதுமாதிரி இவனுக்கு இடுப்புக்கு கீழே இருப்பதை பிடித்து கிட்டார் வாசிப்பது ஒரு ஹாபி..!! அவனைப் பார்த்து நான் பயங்கர கடுப்பானேன். கத்தினேன்.

"ஏய்.. என்னடா வேணும் உனக்கு இப்போ..?" 

"ஒன்னும் வேணாம் மச்சி.. நீ எழுது.. நான் டிஸ்டர்ப் பண்ணல.."

"ங்கோத்தா.. அறிவே இல்லையாடா உனக்கு..? நிம்மதியா ஒரு டைரி கூட எழுத விட மாட்டியா நீ..?"

"ஏன் மச்சி திட்டுற..?" அவன் பரிதாபமாக கேட்டான்.

"திட்டுறதா..? இப்போ நீ போகலை.. மிதிக்கிற மிதில.. கொட்டை ரெண்டும் கோலிக்குண்டு மாதிரி தெறிச்சுடும்..!!"

"என்னடா.. ரொம்ப கோவமா இருக்கியா நீ..? சரி சரி.. நீ எழுது.. நான் அப்புறமா எடுத்து படிச்சுக்குறேன்.."
கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் அவன் சொல்லிவிட்டு நகர, 'இவனை என்ன செய்வது..?' என்று நான் கொஞ்ச நேரம் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் அன்று நடந்த மிச்ச கதைகளை எழுத ஆரம்பித்தேன். செல்போன் ஷோரூமில் லேகா கெஞ்சியது.. ரெஸ்டாரண்டில் அவளுடன் உதடுகள் உரசிக் கொண்டது.. அந்த சர்வர் பையனை கொஞ்ச நேரம் மந்திரித்து விட்ட கோழி மாதிரி ஆக்கியது.. எல்லாம் எழுதினேன்..!!

எழுதி முடித்துவிட்டு நிமிர்ந்தபோது, புதிதாய் வாங்கிய என் செல்போன் 'கிணி கிணி கிணி..' என்று கத்தியது. அதற்குள் ஆக்டிவேட் ஆகிவிட்டதா..? நான் டைரியை மூடி வைத்துவிட்டு, ஓடிச்சென்று என் செல்போனை எடுத்தேன். ஆசையுடன் என் செல்போனைப் பார்த்தவன், பதறிப்போனேன்..!! 'பளிச்.. பளிச்.. பளிச்..' என மின்னல் வெட்டியது மாதிரி வெட்டிக்கொண்டு கிடந்தது என் செல்போனின் திரை..!! 'கீ.. கீ.. கீ..' என்று கிள்ளிவிட்ட குழந்தை மாதிரி அலறியது..!! ஐயையோ.. என்னாயிற்று இதற்கு..?? வாங்கிய முதல் நாளே புட்டுக் கொண்டதா..???

நான் கலவரமாய் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அது கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தமானது. வெட்டிக்கொண்டிருந்த திரை ஒருவழியாய் ஓரிடத்தில் நின்றது. பளீரென வெளிச்சத்தை வாறி இறைத்தது. கோல்டன் கலரில் அந்த எழுத்துக்கள் திரையில் மின்னின. 'ASHOKTEL'..!! என்ன இது..?? AIRTEL என்றுதானே வரவேண்டும்..?? அதற்குள் யாராவது ஏர்டெல் கம்பெனியை வாங்கி விட்டார்களா..? ஒன்றும் புரியவில்லை எனக்கு..?? குழம்பிப் போனவனாய் என் செல்போனையே பார்த்துக் கொண்டிருக்க, அந்த கால் வந்தது..!!

'ASHOK CALLING..'

என்று பளிச் பளிச்சென மின்னியது. காலிங் நம்பர் இருக்க வேண்டிய இடத்தில் கன்னாபின்னாவென்று பூஜ்யங்கள்..!! என்ன எழவுடா இது..? நான் யாருடைய காண்டாக்டும் இதுவரை இதில் ஸேவ் செய்யவே இல்லையே..?? என்ன நடக்கிறது இங்கே..?? என்ன ஆயிற்று என் செல்போனுக்கு..??? இந்த காலை அட்டன்ட் செய்யலாமா வேணாமா..??? எதுவுமே புரியவில்லை.. நான்கைந்து வினாடிகள் யோசித்தவன், அப்புறம் காலை அட்டன்ட் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தேன். பிக்கப் செய்து காதில் வைத்தேன்.

"ஹலோ..!!!" என்றேன்.

"ஹலோ.. இஸ் திஸ் அசோக்..?" என்றது கரகரப்பான மறுமுனை.

"ஆமாம்.. நீங்க யாரு..?" நான் கேட்டதுதான் தாமதம்.

"வாவ்...!!!!!!!!!!!!! ஐ கான்ட் பிலீவ் திஸ்..!!!! திஸ் இஸ் அமேசிங்..!!!!! ஹே.. ஹே.. ஹே.. ஹே..!!!!!!!" என்று லூசுத்தனமாய் கத்த ஆரம்பித்தான் அந்த ஆள். நான் எரிச்சலானேன்.

"ஹலோ.. யாருங்க நீங்க..? யாரு வேணும் உங்களுக்கு..? இந்த நம்பர் எப்படி உங்களுக்கு தெரியும்..??"

"ஹேய் ஹேய்.. டென்ஷன் ஆகாத..!! நான் யாருன்னு உனக்கு தெரியலையா..?"

"சொன்னாதானங்க தெரியும்.. உங்க பேரை சொல்லுங்க.."

"மை நேம் இஸ் அசோக்..!!"

"ஓ.. உங்க பேரும் அசோக்கா..? என் பேரும் அதுதான்..!!" நான் அப்பாவியாய் சொல்ல,

"ஹஹாஹஹாஹஹா...." அந்த ஆள் அடல்ட்ஸ் ஒன்லி ஜோக் கேட்டது மாதிரி கனைத்தான்.

"ஏங்க லூசு மாதிரி சிரிக்கிறீங்க..??"

"பேர் மட்டும் ஒண்ணு இல்ல அசோக்.. ஆளும் ஒண்ணுதான்..!!"

"என்னங்க சொல்றீங்க.. எனக்கு எதுவும் புரியலை.."

"ஐ மீன்.. நீதான் நான்.. நான்தான் நீ..!! ஆனா நான் வேற ஒரு டைம் பீரியட்ல இருந்து பேசுறேன்..!! உனக்கு ப்யூச்சர் டைம்ல இருந்து பேசுறேன்..!! இட் மீன்ஸ்.. இப்போ நீயே உன்கூட பேசிட்டு இருக்குற..!! நீ 2011-ல இருக்குற.. நான் 2035-ல இருந்து பேசுறேன்..!! இப்போ உனக்கு தெளிவா புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்..!! ஹஹாஹஹாஹ...!!!"

சொல்லிவிட்டு அந்த ஆள் மறுபடியும் குதிரை மாதிரி கனைக்க ஆரம்பித்தான். அவன் என்ன சொல்லுகிறான் என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா..???


1 comment: