Sunday 9 September 2012

kathal kathai-screwdriver(asok caling asok 2)


எபிஸோட் – II

அந்த ஆள் எனக்கு பேச வாய்ப்பே தராமல் நெடுநேரம் 'ஹ்ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா..' என வெறி பிடித்தவன் மாதிரி சிரித்துக் கொண்டே இருந்தான். எனக்கோ தலையை சுற்றி ஸ்டார்ஸ் பறப்பது மாதிரி ஒரு உணர்வு..!!

கஸ்டமர் கேர்-இல் இருந்து ஹனி வாய்ஸில் ஒரு ஃபிகர் பேசி.. என் செல்போனுக்கு திறப்புவிழா நடத்தும் என்று எதிர்பார்த்திருந்தேன். இப்படி கழண்டுபோன கேஸ் ஒன்று கரகர வாய்ஸில் பேசி.. கழுத்தறுப்பு ஓப்பனிங் கொடுக்கும் என்று, கனவிலும் நான் நினைக்கவில்லை. எதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்.. டாக்டர்கள் தம்மடிக்கப்போன கேப்பில்.. நர்ஸின் செல்போனை திருடித்தான் இந்த ஆள் பேசுகிறான் என்று ஆரம்பத்தில் எனக்கு தோன்றியது. 

ஆனால் அதே நேரம்.. அந்த ஆள்தான் லூசு என்றாலும், என் செல்போனுக்கு என்னாயிற்று..? இது ஏன் பிசாசு பிடித்த பீஸ் போல பிஹேவ் செய்கிறது..? ஏர் டெல்லுக்கு பதிலாய் ஏதேதோ டெல் காட்டுகிறது..? நான் எதோ கன்னிப்பெண் மாதிரி பளிச் பளிச்சென என்னைப் பார்த்து கண்ணடிக்கிறது..? நடுராத்திரி நாய் மாதிரி ஊளையிட்டு கிலி கிளப்புகிறது..? என்ன இது சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது..??

அதுமில்லாமல் அந்த ஆள் வேறு என் பெயரை அசோக் என்று சரியாக சொன்னானே..? இன்றுதான் செல்போன் வாங்கினேன். இன்னும் ஸிம் கூட ஆக்டிவேட் ஆகவில்லை. அதற்குள் எப்படி..??? ஒருவேளை இது ஏதோ மாந்தீரிக சமாச்சாரமாக இருக்குமோ..? யாராவது என் செல்போனுக்கு பில்லிசூனியம் வைத்துவிட்டார்களா..? இது எதற்கடா வம்பு..? பேசாமல் காலை கட் செய்துவிடலாம்.. நாளை பாடிகார்ட் முனீஸ்வரன் கோயிலில் வைத்து பூஜை செய்த பிறகு யூஸ் பண்ண ஆரம்பிக்கலாம்..!!

யோசனை வந்த அடுத்த வினாடியே, நான் காலை கட் செய்தேன். இல்லை இல்லை.. கட் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் கால் கட் ஆகவில்லை..!! அந்த ஆள் கனைப்பது கன்டின்யுவசாக கேட்டுக் கொண்டே இருந்தது. நான் பதறிப் போனேன்.!! ஐயையோ.. என்ன ஆயிற்று என் செல்போனுக்கு..?? 

"கால் கட் பண்ண ட்ரை பண்ணுறியா அசோக்..?" அந்த ஆள்.

"ஆ..ஆமாம்.. உனக்கு எப்படி தெரியும்..?"

"எனக்கு எல்லாம் தெரியும்.. காலை அவ்ளோ சீக்கிரமா கட் பண்ண முடியாது.. ஹ்ஹ்ஹாஹ்ஹா..."

"ஏ..ஏன்..?"

"அதென்ன க்ளாஸ் கட் பண்ற மாதிரி அவ்வளவு ஈசியா நெனச்சுக்கிட்டியா..?? முடியவே முடியாது..!! வேணுன்னா நல்லா ட்ரை பண்ணிப் பாரு..!!"

ம்ஹூம்.. இது வேலைக்காகாது..!! ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிட வேண்டியதுதான்..!! செல்போனின் நடுமண்டையில் இருந்த அந்த பட்டனை அமுக்கு அமுக்கென்று அமுக்கினேன்..!! ஐயையோ.. ஸ்விட்ச் ஆஃப் பண்ணவும் முடியவில்லை..!! என்ன எழவுடா இது சாமி..??? டென்ஷனாகி கத்தினேன்.

"யோவ்.. ஸ்விட்ச் ஆஃப் பண்ணக் கூட முடியலையா..!!"

"நான்தான் சொல்றேன்ல..? நான் இங்க கனெக்ஷன் கட் பண்ணாம.. அங்க கட் ஆகாது..!!" அந்த ஆள் கூலாக சொல்ல, நான் கடுப்பானேன்.
"யோவ்.. யார்யா நீ..? கூறு இல்லாத குட்டிச்சாத்தான் மாதிரி.. ஏன்யா இப்படி என் உசுரை வாங்குற..? காலை கட் பண்ணித் தொலையா..!!" எரிச்சலில் கத்தினேன்.

"ஓகே ஓகே.. கூல் கூல்..!! ஏன் இப்போ டென்ஷன் ஆகுற..?"

"டென்ஷன் ஆவாம..? யார்யா நீ..?"

"நான்தான் சொன்னனே.. நீதான் நான்.. நான்தான் நீ.."

"ஐயோ ஐயோ.. ராமா ராமா.. என்னால முடியலை.. இப்போ நீ காலை கட் பண்ணலை.. நான் போனை உடைச்சு கடாசிடுவேன்.."

"ஹே ஹே அசோக்.. ப்ளீஸ் ப்ளீஸ்.. அப்டிலாம் பண்ணிடாத.. அப்புறம் இத்தனை நாள் நான் கஷ்டப்பட்டதுலாம் வேஸ்ட்டா போயிடும்..!!" அந்த ஆள் இப்போது கெஞ்ச ஆரம்பித்தான்.

"இல்ல.. இப்படியே நீ பேசிட்டு இருந்தேனா.. நான் உடைக்கத்தான் போறேன்.."

"ப்ளீஸ் அசோக்.. அப்டி மட்டும் பண்ணிடாத..!! உனக்கு இதோட இம்பார்ட்டன்ஸ் இன்னும் புரியலை.. உன்கிட்ட பேசுறதுக்காக நான் இருபத்து நாலு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்குறேன் அசோக்..!!" அந்த ஆள் ஃபீலிங்காக சொல்ல,

"இருபத்துநாலு வருஷமா வெயிட் பண்ணுறியா..? நான் பொறந்தே இருபது வருஷந்தான்யா ஆகுது..!! லூசு லூசு..!!" நான் புலம்பலாய் கத்தினேன்.

"புரியாம பேசாத அசோக்.. இன்னும் ஒரு வாரத்துல உனக்கு ஒரு பேராப்பு வரப்போகுது..!! அதுல இருந்து உன்னை காப்பாத்ததான் இவ்ளோ கஷ்டப்பட்டு உனக்கு கால் பண்ணுறேன்.."

"என்னது பேராப்பா..? அது பேராபத்துன்னுதான சொல்வாங்க..?" நான் இப்போது சற்றே ஆர்வமானேன்.

"இல்ல இல்ல.. ஆப்புதான்..!! 2020ல தமிழ் அகராதில சில கரெக்ஷன் பண்ணினாங்க.. அதுல நெறைய வேர்ட்ஸ் மாறிப்போச்சு.. ஆபத்துன்றதை ஆப்புன்னு மாத்திட்டாங்க..!! 'ஆப்பிலே அறியலாம் அருமை நண்பனை'ன்னு பழமொழியை கூட மாத்திட்டாங்கப்பா..!!"

"ஓஹோ..? அப்படி என்ன எனக்கு பேராப்பு வரப் போகுது..? லேகா இனிமே எனக்கு செலவே பண்ண மாட்டேன்னு சொல்ல போறாளா..?"

"அதில்ல.."

"அப்போ.. அப்பா ஊர்ல இருந்து கெளம்பி வர்றாரா..?"

"ம்ஹூம்.."

"ம்ம்ம்ம்.. அந்த சோடாபுட்டி ஷோபனா எங்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ண போறா..!! கரெக்டா..?"

"ஐயையோ.. அதெல்லாம் இல்லப்பா.."

"அதுவும் இல்லனா.. வேற என்ன..? இந்த ஜானிப்பையன் சைக்கோபாத் ஆகப் போறானா..?"

"உஷ்ஷ்ஷ்...என்னை கொஞ்சம் பேச விடுறியா..?"

"என்ன ஆப்புன்னு சீக்கிரம் சொல்லித் தொலையா..!! எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு..!!"

"நோ..!! அதை நான் இப்போ சொல்ல மாட்டேன்..!!"

"வேற எப்போ சொல்லுவ..? ஆப்பு வச்சு.. அதை உருவி.. ஆயின்ட்மன்ட்லாம் அப்ளை பண்ணப்புறம் சொல்வியா..?"

"அசோக்.. மொதல்ல உனக்கு என் மேல நம்பிக்கை வரணும்.."

"அது இந்த ஜென்மத்துல வராது.."

"வரும்..!! மொதல்ல ஒன்னு புரிஞ்சுக்கோ.. உனக்கு நல்லது பண்றதுக்குத்தான் நான் இவ்ளோ கஷ்டப்படுறேன்..!!"

"எனக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு நீ நெனச்சேன்னா.. நர்ஸ்கிட்ட புடுங்குன அந்த செல்போனை அவங்ககிட்டயே திருப்பி கொடுத்துட்டு.. டாக்டர்ங்க ஷாக் ட்ரீட்மன்ட் குடுக்குறதுக்கு முன்னாடி.. பெட்ல போய் மூடினு படுத்துக்கோ..!!"
"ஐயோ... என்னை லூசுன்னு முடிவே பண்ணிட்டியா..? அவசரப்படாம.. நான் சொல்றதை கொஞ்ச நேரம் பொறுமையா கேக்குறியா..?" அந்த ஆள் இப்போது டென்ஷனாக, நான் சற்று அடங்கினேன்.

"சரி கேக்குறேன்.. சொல்லித்தொலை.."

"டைம் மெசின் கேள்விப்பட்டிருக்கியா..?"

"டைம் மெசினா..? அப்டினா..? வாட்சா..??"

"ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பா... முடியலை..!! உனக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்கிறது..? ம்ம்ம்ம்.. ஆங்.. டெர்மினேட்டர் படம் பாத்திருக்கேல..?"

"ம்ம்ம்.."

"அதுல அர்னால்ட் ஃப்யூச்சர் டைம்ல இருந்து.. ப்ரசன்ட் டைமுக்கு வந்து.. ஒரு சின்னப்பயனை காப்பாத்துவாருல..?"

"ஆமாம்.. அந்தப்பையனோட அம்மா ஒரு சப்பை ஃபிகர் இருக்கும்.. அதையும் சேர்த்து அறிவில்லாம காப்பாத்துவாரு..!!"

"அந்த மாதிரி.. ஒரு டைம் பீரியட்ல இருந்து இன்னொரு டைம் பீரியட்க்கு ட்ராவல் பண்றதுக்கு யூஸ் பண்ணுற மெசினுக்கு பேர் தான் டைம் மெசின்..!!" அந்த ஆள் சொல்ல சொல்ல, அந்தப் படத்தில் சொல்ல வந்த மேட்டர் என் மனதுக்குள் ஓடியது.

"ஓஹோ..?" என்றேன் ஓரளவு புரிந்தவனாய்.

"அதே மாதிரி நான் ஒரு மெசின் கண்டுபிடிச்சிருக்கேன்..!!"

"அதென்ன மெசின்..?"

"எலக்ட்ரோ மேக்னடிகோ அல்ட்ரா ஹை ஃப்ரிக்வன்சி ட்ரான்ஸ்மிட்டர் ஆஃப் மல்டிப்பில் அண்ட் பேரலல் டைம் ட்ரா.."

"யோவ்.. யோவ்.. இரு..!! என்னவோ பெடக்ஸ்ல கை வச்ச ஃப்ரெஞ்ச் ஃபிகரு மாதிரி.. எதுக்கு இப்போ என்னை திட்டுற..??"

"ஐயோ.. திட்டல அசோக்..!! அது நான் கண்டு பிடிச்ச மெசினோட பேரு.."

"அடத்தூ..!!! பேரே இவ்ளோ கேவலமா இருக்கே.. அந்த மெசின் எவ்ளோ கேவலமா இருக்கும்..? அதை கண்டுபுடிச்ச நீ எவ்ளோ கேவலமான ஆளா இருப்ப..? ஏன்யா.. உங்களுக்குலாம் அறிவே இல்லையா..? கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம.. கண்டதையும் கண்டு பிடிச்சு தொலைக்க வேண்டியது.. எங்களை மாதிரி ஸ்டூடண்ட்ஸ்க உசுரை வாங்க வேண்டியது..!! இந்தப்பேரை எல்லாம் என் மெமரில ஏத்துனா.. என் மூளை தாங்காதுய்யா..!!"

"ஓகே அசோக்.. மெசின் பேரை வேணா.. சின்னதா, கேட்சியா மாத்திர்றேன்... இப்போ அந்த மெசின் பத்தி நான் சொல்றதை கொஞ்சம் கேக்குறியா..?"

"ம்ம்ம்.. சொல்லு..."

"இந்த மெசின்ல ட்ராவல்லாம் பண்ண முடியாது..!! ஆனா.. கடந்த காலத்துல இருக்குறவங்க செல்போனுக்கு கால் பண்ணி பேசலாம்..!! அது மூலமாத்தான் நான் இப்போ 2035ல இருந்து.. 2011ல இருக்குற உன்கூட பேசிட்டு இருக்குறேன்..!! எப்பூடி..?"

"ஓ.. ஓஹோ.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ..??"

"கலாய்க்காத அசோக்.. என்னதான் இருந்தாலும் நான் ஒரு எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர்னு மறந்துட்டு பேசாத.."

"ஹை.. நீயும் எலக்ட்ரானிக்ஸா..? நானும் எலக்ட்ரானிக்ஸ்தான்..!!"

"ஐயோ அசோக்..!!! நீதான் நான்னு ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருக்கேன்..? அதை ஏன் புரிஞ்சுக்காமலே பேசிட்டு இருக்குற..? எஞ்சினியரிங் முடிச்சுட்டு ரேடியோ பிசிக்ஸ்ல டாக்டரேட் வேற பண்ணிருக்கேன்..!! அப்போ இருந்து என் ஆராய்ச்சியை ஆரம்பிச்சு.. இந்த மெசினை டிசைன் பண்ணி.. இன்னைக்குத்தான் என் ஆராய்ச்சி சக்சஸ் ஆயிருக்கு..!! ஒரு பெரிய சாதனையை நான் இன்னைக்கு பண்ணிருக்கேன்..!! ஐ மீன்.. ஃப்யூச்சர்ல இதுலாம் நீ பண்ணப் போற..!!"

"யாரு.. நான்..? ஃப்யூச்சர்ல பி.எச்.டி-லாம் பண்ணப் போறனா..?"

"ஆமாம்.."

"யோவ்.. போய்யா..!! உன் மேல இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் எனக்கு இப்போ சுத்தமா போயிடுச்சு.. நானே எட்டு அரியரு பத்து அரியரா மாறிடக் கூடாதுன்னு.. எல்லையம்மன் கோயிலுக்கு கூழ் ஊத்துறதா வேண்டிருக்கேன்.."
"ஐயோ.. எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் அசோக்.. அப்புறம் நீ என்னை மாதிரி பிரில்லியண்டா மாறிடுவ.."

"உன்னை மாதிரி..???" 

"ஆமாம்.."

"போய்யா லூசு.. போனை கட் பண்ணுயா..!! இன்னும் கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசினேன்.. நானும் உன்னை மாதிரி மெண்டல்தான் ஆவேன்.."

"அசோக் ப்ளீஸ்.. டென்ஷன் ஆகாத..!! ம்ம்ம்ம்ம்ம்... ஓகே..!! நான் உன் வழிக்கே வர்றேன்.. நீதான் நான்னு நம்புறதுக்கு.. நான் என்ன பண்ணனும்னு சொல்லு.. பண்ணுறேன்..!!"

அந்த ஆள் அப்படி சீரியசான குரலில் சொல்லவும் நான் ஒருகணம் அமைதியானேன். நிதானித்தேன். சற்றே யோசித்தேன். ஒரு வேளை இந்த ஆள் சொல்வதிலும் உண்மை இருக்குமோ..? நான்தான் இந்த ஆளோ..? எவ்வளவு கேவலமாக திட்டினாலும் வெட்கமே இல்லாமல் வேறு பேசிக் கொண்டிருக்கிறான்..?? ஜானியின் எஃபக்டில்.. எதிர்காலத்தில் நான் இப்படி ஆகி விட்டேனோ..?? என்னுடைய எரிச்சல் குறைந்து, சற்றே இயல்பான குரலில் கேட்டேன்.

"சரி.. நான் கொஞ்சம் கேள்விலாம் கேக்குறேன்.. பதில் சொல்றியா..?"

"ம்ம்.. கேளு..!!"

"என் குடும்பத்தை பத்தி சொல்லு.. அவங்க பேர், கேரக்டர்லாம் சொல்லு.."

அந்த ஆள் சொல்ல ஆரம்பித்தான். என்னைப்பற்றி.. என் அப்பா, அம்மா பற்றி.. தாத்தா, பாட்டி பற்றி..!! அவன் சொன்ன விஷயங்கள் எல்லாம் துல்லியமாக இருக்க, நான் கொஞ்சம் கொஞ்சமாய் ஆச்சரியத்தில் மூழ்க ஆரம்பித்தேன். மேலும் மேலும் நிறைய கேள்விகள் என்னைப் பற்றி கேட்டேன். எனக்கு மட்டுமே தெரிந்த சில ரகசியங்கள் பற்றி கேட்டேன். (எ.கா) என் உடலில் அந்தரங்க இடங்களில் இருக்கும் மச்சங்கள்..!! ஹிஹி..!!

எல்லாமே 'பட்.. பட்.. பட்..' என அடித்தான். அப்புறம் நான் கேட்காமலே, என் வாழ்க்கையில் சிறுவயதில் நடந்த சில சம்பவங்களை, அவனாகவே சொன்னான். ஒண்ணாவது படிக்கையில்.. அடுத்த வீட்டு அபிக்குட்டியுடன் அப்பா, அம்மா விளையாட்டு விளையாடியது..!! அஞ்சாவது படிக்கையில்.. கிரிக்கெட் பால் பட்டு என் குஞ்சாமணி வீங்கியது..!! எஸ்.எஸ்.எல்.சி படிக்கையில்.. என்னிடம் டைரி எழுதச்சொன்ன எஸ்தர் டீச்சரிடம்.. 'ஐ லவ் யூ.. டீச்சர்..' எழுதிக் காட்டி அறை வாங்கியது..!! இன்னும் கூட சில விஷயங்கள் சொன்னான். அதெல்லாம் சென்சார்ட்..!! அதெல்லாம் சொன்னால் என் மீது நீங்கள் வைத்திருக்கும் நல்ல அபிப்ராயம் நாசமாக போகி விடும். ('இப்போது மட்டும் என்ன வாழுதாம்' என்று கேட்காதீர்கள்)

அதையெல்லாம் கேட்டபிறகு, என்னால் அந்த ஆளை நான்தான் என்று நம்பாமல் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் அந்த ஆள் மீது இருந்த கோபமும், எரிச்சலும், பயமும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை விட்டு விலகின. மிக இயல்பான குரலிலேயே அவரிடம் பேச ஆரம்பித்தேன்.

"சரிய்யா.. நீ இவ்ளோ சொன்னப்புறம்.. நீதான் நான்னு எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு.."

"தேங்க்ஸ் ஜூனியர்..!!"

"என்னது..? ஜூனியரா..?"

"ஆமாம்.. ரெண்டு பேர் பேரும் ஒண்ணா இருக்குறதால.. படிக்கிறவங்களுக்கு குழப்பம் வந்துடக் கூடாது பாரு.. அதனால இனிமே நான் உன்னை ஜூனியர்னு கூப்பிடுறேன்.. நீ என்னை சீனியர்னு கூப்பிடு.. ஓகேவா..?"

"ம்ம்ம்ம்.. எல்லாம் என் நேரம்.. சரி.. கூப்பிட்டு தொலைக்கிறேன்..!! ஆனா.. உன் மேல முழுசா இன்னும் நம்பிக்கை வரலை மவனே.."

"ஏன்..??"

"என்னைப் பத்தி டீடெயில் சொன்ன.. சரி..!! ஆனா.. நீ ஃப்யூச்சர்ல இருந்துதான் கால் பண்ணுறேன்னு நான் எப்படி நம்புறது..? அதையும் ப்ரூவ் பண்ணிக்காட்டு.."

"ஹ்ஹாஹ்ஹா.. அது சப்பை மேட்டர் ஜூனியர்.. இரு வர்றேன்.."

சொல்லிவிட்டு சீனியர் அமைதியானார். நான் செல்லுக்கு காது கொடுத்தவாறு காத்திருந்தேன். சில வினாடிகளில் அந்தப்பக்கம் ஏதோ பேப்பர் புரட்டப்படும் சத்தம் கேட்டது. நான் பொறுமை இல்லாமல் கத்தினேன்.

"சீனியர்.. என்னை இந்தப்பக்கம் லைன்ல வெயிட் பண்ண சொல்லிட்டு.. நீ அந்தப்பக்கம் நியூஸ் பேப்பர்ல ராசிபலன் பாத்துட்டு இருக்கியா..?"

உடனே சமாளித்துக்கொண்டு அவள் பட்டென சொன்னாள். ஆனால் எவ்வளவு பெட் வைக்கலாம் என்று என்னால்தான் உடனே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. யோசித்தேன்..!! மூணு குவாட்டரு.. ஒரு லிட்டர் ஸ்ப்ரைட்.. பிளாஸ்டிக் கப்.. ஊறுகா பாக்கெட்.. சிகரெட்..!! ஒரு ஐநூறு ரூபாய் இருந்தால் போதும் என்று தோன்றியது..!!

"ஐநூறு ரூபா..!!" நான் சொன்னதும், அவள் என்னை ஒருமாதிரி வித்தியாசமாக பார்த்தாள்.

"என்னடா.. லேகா அக்காகிட்ட இருந்து லம்பா ஒரு அமவுண்ட் ஆட்டையை போட்டுட்டியா..?"

"ஏய் அரிசி மூட்டை.. ஐநூறு ரூபாலாம் உங்க ஊர்ல லம்ப் அமவுண்டா..? அப்பன்னா லட்சம், கோடிலாம் நீ என்ன சொல்லுவ..?"

"இல்ல.. இவ்ளோலாம் நீ பெட் கட்டினது இல்லையே.. அதான் கேட்டேன்.." அவள் கூர்மையாக கேட்க, இப்போது நான் சற்று திணறினேன்.

"அ..அது.. இன்னைக்கு என்னவோ இந்தியா வின் பண்ணிடும்னு எனக்கு ரொம்ப கான்ஃபிடண்டா இருக்கு.. அதான்.."

"ம்ம்ம்ம்... சரி ஓகே.. பந்தயத்துக்கு நானும் ரெடி.."

"அப்போ.. ஐநூறு ரூபா எடு.."

"என்ன.. இப்போவே கேக்குற..?"

"ஹாஹா.. எப்படியும் நீதான் தோக்கப் போற... எனக்கு இன்னைக்கு கொஞ்சம் செலவு இருக்கு.. அதான் முன்னாடியே கேக்குறேன்.."

"ஒருவேளை நான் ஜெயிச்சுட்டா..?"

"ஜெயிச்சாத்தான..? ஓகே.. நீ ஜெயிச்சிட்டா தவுசண்ட் ரூபீஸா நான் கொடுத்திடுறேன்.."

"அவ்ளோ காசை நீ தருவேன்னு நான் எப்படி நம்புறது..?" அவள் சந்தேகமாக கேட்க, இப்போது நான் என் பாக்கெட்டில் இருந்து செல்போனை உருவி அவளிடம் காட்டினேன்.

"ஹேய்.. இது என்னன்னு பாத்தியா..? புது செல்போன்.. நாலாயிரம் ரூபா.. நான் தோத்துட்டா.. இந்த செல்போனை நீ எடுத்துக்கோ.. ஓகேவா..?"

அவள் கொஞ்ச நேரம் அந்த செல்போனை உற்றுப் பார்த்தாள். சில வினாடிகள் யோசித்தாள். அப்புறம் சமாதானம் ஆனவளாய், 

"ஓகே.. என் பர்ஸ் கீழ இருக்கு.. அப்புறமா வந்து ஐநூறு ரூபா வாங்கிக்கோ..!!" என்றாள்.

"ஓகே பிங்கி.. அப்போ இன்னைக்கு லன்ச் முடிச்சுட்டு எங்க ரூமுக்கு வந்துடு.. ஃபுல் மேட்சும் எங்க ரூம்லேயே பாக்கலாம்.."

"உன் ரூமுக்குலாம் நான் வரலைப்பா.. அந்த ஜானி இருப்பான்.."

"ஏன்.. அவன் இருந்தா என்ன..?"

"அவன் இருந்தா நான் வர மாட்டேன்.."

"ஆமாம்.. உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு நெனச்சேன்.. ஏன் கொஞ்ச நாளா அவன் மேல கடுப்பா இருக்குற..? என்ன பிரச்னை உங்களுக்குள்ள..?" 

"அவனைப் பத்தி பேசாத அசோக்.. சரியான பொறுக்கி அவன்.."

"என்னாச்சு பிங்கி..? ஜானி ஏதும் உனக்கு நூல் வுட்டுட்டானா..?"

"எனக்கு வுட்டாலும் பரவால.. என் அம்மாவுக்கு வுடுறான்.." அவள் ரொம்ப ஃபீலிங்காக சொல்ல,

"என்னது...????? உன் அம்மாவுக்கா..????" சத்தியமாய் நான் ஷாக்காகி போனேன்.

"ஆமாம் அசோக்.. அவங்க வாசல் தெளிக்க வர்றப்போ லுக் விடுறது.. செடிக்கு தண்ணி ஊத்துறப்போ கண்ணடிக்கிறது.. 'அஞ்சரைக்குள்ள வண்டி படம் பாத்திருக்கீங்களா ஆண்ட்டி'ன்னு வழியுறது..!! ரொம்ப அட்டகாசம் பண்றான் அசோக்.." பிங்கி இப்போது கண்கள் கலங்க சொன்னாள்.

"ம்ம்..." எனக்கு பேச்சே வரவில்லை.
"என் அம்மா என்ன மாதிரி இல்ல அசோக்.. ரொம்ப சாஃப்ட் டைப்..!! என்கிட்டே எப்படிலாம் பொலம்புறாங்க தெரியுமா..? 'அவன் பார்வையே சரியில்லடி.. வீட்டை விட்டு வெளில போகவே பயமா இருக்குடி..' அப்டின்னு என் மடில படுத்து 'ஓ'ன்னு அழறாங்க.."

"அச்சச்சோ..!!"

"அவன்கிட்ட சொல்லி வையி அசோக்..!! இவன் பண்ற டார்ச்சர்ல என் அம்மா ஏதாவது ஏடாகூடமா பண்ணிக்கிட்டாங்க.. அப்புறம் நான் அவனை சும்மா விட மாட்டேன்..!! ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. என் அப்பா மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா.. எங்கம்மாவுக்கு இப்படி ஒரு நெலமை வந்திருக்குமா..? "

பிங்கி என் தோளில் சாய்ந்து கொண்டு புலம்ப, நான் அவளுக்கு ஆறுதல் சொன்னேன். இந்த மாதிரி டயலாக்குகளை நிறைய தமிழ் படங்களில் கேட்டிருக்கிறேன். இப்படி என் நிஜ வாழ்க்கையில், எதிர்பாராத ஒரு கேரக்டரின் வாயில் இருந்து கேட்பேன் என்று நினைத்தே பாத்ததில்லை. ஜானியை நினைத்தால் பயங்கர கடுப்பாக வந்தது. கேட்பது எல்லாம் அமெரிக்க பாப் பாடல்கள்.. பார்ப்பது எல்லாம் ஐம்பதை நெருங்கும் பெண்மணிகள்..!! என்ன எழவு ரசனையோ..??

நான் பிங்கியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். ஜானியை கண்டிப்பதாகவும், அவன் இனிமேல் அவளுடைய அம்மாவின் ரூட்டில் க்ராஸ் செய்ய மாட்டான் என்றும் சொல்லி அனுப்பினேன். ரூமுக்கு சென்றதும் ஜானியிடம் இதுபற்றி விசாரித்தேன். அவனோ கூலாக ஆப்பை திருப்பி எனக்கு வைத்தான்.

"என்ன மச்சி.. நீயுந்தான் அவங்கம்மாவை சைட் அடிக்கிற.. அதுலாம் நான் ஏதாவது கண்டுக்கிட்டனா..?"

"ஏய்.. நான் எப்போடா சைட்டடிச்சேன்..?" உச்சபட்ச டென்ஷனில் கத்தினேன்.

"பொய் சொல்லாத மச்சி.. எல்லாம் எனக்கு தெரியும்..!! சைட்டடிக்கிற.. டெயிலி நைட்டு அவங்களை நெனச்சு.."

"டேய்..!!!!!!!!!!!!!" அவன் மேற்கொண்டு எதுவும் சொல்லிவிடக் கூடாது என்று நான் அலறினேன்.

"ப்ச்.. அதுலாம் உன் இஷ்டம் மச்சி..!! உனக்கு புடிச்சிருக்கு.. பண்ணுற..!! இதலாம் போய் நான் பிங்கிட்ட போட்டுக் கொடுப்பேன்னு நெனைக்காத.. நான் ரொம்ப டீசண்டு..!!"

அவன் கேஷுவலாக சொல்லிவிட்டு, ஷார்ட்சுக்குள் கைவிட்டு சொறிந்தவாறே நகர்ந்து செல்ல, நான் அவனை என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தவாறு நின்றிருந்தேன். அவன் என்ன சொல்ல வருகிறான் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் இந்த விஷயத்தில் நான் தலையிட்டால், இல்லாததும் பொல்லாததுமாக என்னைப் பற்றி பிங்கியிடம் போட்டுக் கொடுப்பேன் என்று மறைமுகமாக மிரட்டி விட்டுப் போகிறான்..!!

ஏற்கனவே என் முகத்திற்காகத்தான் இன்னும் எங்களை இந்த வீட்டில் வைத்திருக்கிறார்கள். இப்போது இவன் சென்று என்னைப் பற்றி வைத்தி வைத்தால்.. அவ்வளவுதான்..!! வீட்டை காலி பண்ண சொல்லி விடுவார்கள். ஜானிக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. அவனுடைய அத்தையுடன் சென்று தங்கிக் கொள்வான். நான்தான் நடுத்தெருவில் நிற்க வேண்டும்..!! 

ம்ஹூம்..!! ஜானியை பகைத்துக் கொள்வது நல்லது இல்லை என்று தோன்றியது. அவனிடம் கொஞ்சம் இறங்கிப் போகலாம் என்று முடிவு செய்தேன். புதிதாக பாசம் பிறந்தவனாய்.. அவனிடம் சென்று ஐஸ் வைத்தேன். தண்ணி வாங்கித் தருவதாக சொன்னேன். அவ்வளவுதான்..!! 'நண்பேன்டா..!! என்று என்னை கட்டிக் கொண்டான். 'காசு ஏது..?' என்று கேட்டான். பிங்கியிடம் பெட் கட்டிய மேட்டர் பற்றி சொன்னேன்.

படியிறங்கி கீழே சென்று பிங்கியிடம் ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டேன். அவள் வரும்போது ‘ஆன்ட்டியிடம் வடை, பஜ்ஜி போட சொல்லி எடுத்து வருமாறு’ சொன்னேன். அவள் ‘ஜானியை எங்காவது அடித்து விரட்டுமாறு’ சொன்னாள். நானும் ஜானியும் வெளியே சென்று சரக்கு வாங்கி வந்தோம். எனக்கு இரு குவார்ட்டர்..!! அவனுக்கு ஒன்று..!! வீட்டுக்கு வந்து எல்லாவற்றையும் பரப்பி வைத்து விட்டு காத்திருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து சட்டி நிறைய வடை, பஜ்ஜியுடன் பிங்கி உள்ளே நுழைய..

"மச்சி.. சைடிஷ் வந்துடுச்சுடா..!!" என்று ஜானி உற்சாகமாக கத்தினான்.

"அடப்பாவி..!!! நீங்க தண்ணியடிக்க சைடிஷ்க்காகத்தான்.. என் மம்மியை வடை பஜ்ஜி போட சொன்னியா?..?" பிங்கி உஷ்ணமாக என்னை முறைத்தாள்.

"கோச்சுக்காத பிங்கி..!! வா வா.. மேட்ச் ஆரம்பிக்கப் போகுது.. இந்தியா டாஸ் வின் பண்ணிருக்கு.. இங்கிலாந்து பேட்டிங்..!!" நான் அவளை சமாதானப் படுத்தினேன்.


அவள் எனக்கும் ஜானிக்கும் நடுவில் வந்து அமர்ந்து கொள்ள, நாங்கள் குவார்ட்டரின் கழுத்தை திருகி, உள்ளே உள்ள யெல்லோ நிற திரவத்தை பிளாஸ்டிக் கப்பில் ஊற்றினோம். 'ஜானியை ஏன் அடித்து விரட்டவில்லை..' என்று பிங்கி என்னிடம் ஜாடையில் கேட்டாள். 'அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பிங்கி..' என்று நான் பார்வையாலேயே கெஞ்சினேன். மேட்ச் ஆரம்பித்தது. நாங்களும் சியர்ஸ் சொல்லி ஆரம்பித்தோம்..!! (நாங்களும் = நானும், ஜானியும்..!! பிங்கிக்குலாம் அந்தப் பழக்கம் இல்ல..!!)

"ஆண்ட்டியை கூட்டிட்டு வரலையா பிங்கி..?" ஜானி கேட்டான்.

"அவங்க எதுக்கு..?" பிங்கி கடுப்பாக கேட்டாள்.

"அவங்க இருந்தா ஜாலியா இருக்குமேன்னு சொன்னேன்.."

"என்னது..????" பிங்கி சூடானாள்.

"இல்ல.. எல்லாரும் ஜாலியா கிரிக்கெட் பாக்கலாம்னு சொன்னேன்.."

குடிபோதையில் ஜானி உளற, பிங்கி அவனையே கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னிடம் திரும்பி 'முடியலைடா..!!' என்பது போல முகம் சுளித்தாள். நான் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு விழித்தேன். யாருக்கும் சப்போர்ட் பண்ண முடியாத சூழ்நிலை. மேட்ச் பார்த்து இந்தியாவுக்காவது சப்போர்ட் செய்யலாம் என்று பார்த்தால், நம்மாட்கள் போட்ட பந்தை அவர்கள் சுளுக்கெடுத்தார்கள். கீஸ்வேட்டர் என்று ஒருத்தன் வந்து கிழிய கிழிய அடித்தான் (பந்தைத்தான்..!! ஹிஹி..!!). குக் என்பவன் வந்து குமுறு குமுறு என குமுறினான். பின்பு பீட்டர்சன் வேறு வந்து பிரித்து மேய்ந்தான். நமது பவுலர்கள் கதிகலங்கிப் போனார்கள்.

ஒரு வழியாய் இங்கிலாந்து இன்னிங்க்ஸ் முடிந்தது. 50 ஓவரில் 325 ரன்கள் அடித்து விட்டார்கள். இங்கே நாங்களும் வாங்கி வந்த குவார்ட்டர்களை அடித்து காலி செய்திருந்தோம். ஜானி மட்டையாகி இருந்தான். போதை உச்சத்துக்கு ஏறி 'ஆண்ட்டி வடை சூப்பர்..!!' என்று டபுள் மீனிங்கில் பேசி, பிங்கியிடம் அறை வாங்கியவன், அப்படியே சாய்ந்து விட்டான். நானும் உச்ச பட்ச போதையில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். பிங்கி மட்டும் சிகரெட் நெடி தாங்காமல் மூக்கைப் பொத்தியவாறு கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்புறம் இந்தியா பேட்டிங் ஆரம்பமானது. முதல் ஓவரிலேயே முட்டை கிடைத்த சந்தோஷத்தோடு சேவாக் வெளியேறினார். 'நண்பன் இல்லாமல் நான் ஆட மாட்டேன்' என்றவாறு கவுதம் கம்பீரும் கம்பெனி கொடுக்க சென்று விட்டார். 50 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகள் போய்விட்டன. ஆனால்.. அதற்காகவெல்லாம் நான் கலங்கவில்லை. சீனியர்தான் சொல்லியிருக்கிறாரே.. நாமதான் இன்று ஜெயிக்கிறோம்..!! பிங்கி குஷியாக மேட்ச் பார்க்க.. நானும் சந்தோஷமாகவே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் என் சந்தோஷம் நெடுநேரம் நீடிக்கவில்லை. ராகுல் டிராவிட்டிற்கு ராங்காக LBW கொடுக்க, எனக்கு மனதுக்குள் லேசாக ஒரு நடுக்கம் ஏற்பட்டது. ‘எதோ ஒரு லூசு சொன்னதை நம்பி செல்போனை பெட்டாக கட்டிவிட்டேனோ..?’ என்று உதறலெடுக்க ஆரம்பித்தது. பிங்கி வேறு ஒவ்வொரு விக்கெட்டுக்கும், என் செல்போனை திரும்பி பார்த்து ஆசையாக லுக் விட்டுக் கொண்டிருந்தாள். ஐயையோ.. ஒருவேளை இந்தியா தோற்றுவிட்டால், செல்போனை இவளிடம் இழப்பதுடன், லேகாவிடம் வேறு செவுளிலேயே அறை வாங்க வேண்டுமே..?? கடவுளே.. என்ன இது சோதனை..??

கோஹ்லியும், டோனியும் மட்டும் கொஞ்ச நேரம் டொக்கு வைத்து ஆடினார்கள். மற்றவர்கள் எல்லாம் 'வந்தார்கள்.. நின்றார்கள்.. சென்றார்கள்..' ஆயினர். நேரம் ஆக ஆக எனக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்தது. எட்டு விக்கெட், ஒன்பது விக்கெட்டானது. இன்னும் 50 பந்துகளில் 122 ரன்கள் எடுக்க வேண்டும். இவ்வளவு நேரம் லுக் விட்டுக் கொண்டிருந்த செல்போனை, பிங்கி இப்போது தொட்டு தொட்டு பார்க்க ஆரம்பித்திருந்தாள். எனக்கு சுத்தமாக நம்பிக்கை போய் விட்டது. குடித்த போதை எல்லாம் குப்பென்று இறங்கிப் போயிருந்தது. குலுங்கு குலுங்கி அழ வேண்டும் போலிருந்தது.

அப்போதுதான் என் செல்போனுக்கு அந்த கால் வந்தது. 'ASHOK CALLING..!!!!' அதைப் பார்த்ததும் நான் செமக் கடுப்பானேன். 'மவனே.. உன்னால்தான் எல்லாம்..' என்று மனதுக்குள் கருவியவாறு என் செல்போனை எடுத்தேன். 'இதோ.. வந்துர்றேன் பிங்கி..' என்று அவளிடம் சொல்லிவிட்டு, மொட்டை மாடிக்கு ஓடி வந்தேன். கால் பிக்கப் செய்ததும் கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தேன்.

"யோவ்.. கேனை.. லூசு.. மெண்டல்..!! இப்படி பண்ணிட்டியேயா..?"



"ஏன் ஜூனியர் திட்டுற..? அப்படி என்ன பண்ணிட்டேன் நான்..?" சீனியர் எதுவும் புரியாதவராய் கேட்டார்.

"பின்ன..? இந்தியா ஜெயிக்கும்னு சொன்னியேயா..?"

"ஆமாம்.."

"போய்யா.. இந்தியா தோக்கப் போகுதுயா..!!"

"தோக்கப் போகுதா..? அப்புறம் எதுக்கு இந்தியா ஜெயிச்சதுன்னு நான் எழுதி வச்சிருக்கேன்..?"

"ஆமாம்.. அதை எங்கிட்ட வந்து கேளு..!! அது நீ ஏதாவது மப்புல எழுதிருப்ப..?"

"ஜூனியர்.. இன்னும் கொஞ்ச நேரத்துல.. அதை நீயும் எழுதப் போறேன்னு ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு..!! மப்புல எழுதிருப்பேன்ற..? அப்டினா.. நீ இப்போ மப்புல இருக்கியா..??" சீனியர் சீரியாசான குரலில் கேட்க,

"ஆ..ஆமாம்..!!! அ..அதெப்படி உனக்கு தெரியும்..???" நான் திணறினேன். இப்போது சீனியரும் குழம்பினார்.

"ஐயையோ.. ஒருவேளை குடிபோதைல.. இந்தியா ஜெயிச்சிருச்சுன்னு தப்பா எழுதிட்டமோ..?"

"நான் எங்கேயா எழுதினேன்..? நீதான் எழுதிருக்குற..!! எனக்கு ஒன்னும் ரொம்பலாம் மப்பு இல்ல.. ஜானிதான் நெறைய குடிச்சுட்டு.. பிங்கிட்ட அறை வாங்கிட்டு மட்டையாயிட்டான்..!!"

"ஹேய் ஹேய்.. இரு இரு.. இப்போ எனக்கு ஞாபகம் வருது..!! நான், ஜானி, பிங்கி மூணு பேரும் உக்காந்து பார்த்தோமே.. பிங்கியோட அம்மா கூட வடை, பஜ்ஜிலாம் போட்டுக் கொடுத்தாங்களே.. அந்த மேட்சா இது..?"

"ஆமாம்யா..!! அந்த மேட்ச்தான்..!!"

"ஜூனியர்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. அந்த மேட்ச்ல இந்தியாதான் ஜெயிச்சது..!!"

"யோவ் போய்யா..!! ஒன்பது விக்கெட் போயிடுச்சு.. இனிமே எங்க ஜெயிக்க போறானுக..?"

"ஒரு நிமிஷம் இரு.."

சொன்ன சீனியர் கொஞ்ச நேரம் அமைதியானார். அப்புறம் அந்தப் பக்கம் அவர் டைரி புரட்டும் சப்தம் கேட்டது. நான் அமைதியாக காத்திருந்தேன். சிலவினாடிகளில் சீனியர் உற்சாகமாக சொன்னார்.

"அந்த மேட்ச் இந்தியாதான் ஜெயிச்சிருக்கு ஜூனியர்.. முனாஃப் படேல் முப்பது பால்ல செஞ்சுரி அடிச்சு ஜெயிக்க வச்சிருக்காரு.." அவர் சொல்ல சொல்ல, எனக்கு மயக்கம் வராத குறைதான்..!!

"என்னது..??? முனாஃப் படேல் முப்பது பால்ல செஞ்சுரி அடிச்சாரா..? என்னய்யா சொல்ற நீ..??"

"ஆமாம் ஜூனியர்.. அவர் வெளையான்டதை நீ பார்த்தியா..?"

"எங்கேயா பார்த்தேன்..? அப்போதான் வந்து இறங்குனாரு.. அதுக்குள்ளதான் உன் கால் வந்துடுச்சே..?"

"ஓஹோ..? மேட்சை முழுசா பார்க்காமத்தான்.. எங்கிட்ட வந்து கத்திக்கிட்டு இருக்கியா..? போய் மொதல்ல மேட்சை முழுசா பாரு.. நான் அப்புறம் கால் பண்ணுறேன்..!!"

சொல்லிவிட்டு சீனியர் கனெக்ஷனை கட் செய்ய, நான் விழுந்தடித்துக் கொண்டு கீழே ஓடினேன். எங்கள் அறைக்கதவை உள்ளே தள்ளியவன், அங்கே பிங்கி அமர்ந்திருந்த போஸை பார்த்து அதிர்ந்து போனேன். சிப்ஸ் அரைபட்ட வாயை மூடக்கூட தோன்றாமல், 'ஆ' வென பிளந்தவாறு வைத்திருந்தாள். டிவியை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய நிலையை பார்த்து நான்தான் பயந்து போய் கேட்டேன்.

"பிங்கி.. என்னாச்சும்மா..? ஏதோ பேய்கிட்ட ஃப்ளையிங் கிஸ் வாங்குனவ மாதிரி உக்காந்திருக்குற..?"

"இங்க பாருடா இந்தக்கொடுமையை..!!" அவள் டிவி நோக்கி கை நீட்டினாள்.



நான் திரும்பி டிவியை பார்த்தேன். ஆக்ஷன் ரீப்ளே ஓடிக்கொண்டிருந்தது. ஆண்டர்சன் வீசிய ஒரு பந்தை, அசால்டாக சிக்சருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் முனாஃப் படேல்..!! அப்புறம் கொஞ்ச நேரம் டிவியில் ஓடிய விஷயங்களை எங்களால் நம்பவே முடியவில்லை. இங்கிலாந்து பவுலர்கள் போட்ட பந்துகளை முனாஃப் படேல் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசு விளாசு என்று விளாசினார். இங்கிலாந்து ப்ளேயர்கள் இனிமா குடித்தவர்கள் மாதிரி விழித்தார்கள். ஒருபக்கம் இஷாந்த் ஷர்மா சிங்கிள் எடுத்துக் கொடுக்க, ஒற்றை ஆளாய் செஞ்சுரி அடித்து இந்தியாவை ஜெயிக்க வைத்தார்.. முனாஃப் படேல்..!!

தான் செல்போன் இழந்ததை இன்னும் நம்ப முடியாமல், பிங்கி பித்துப் பிடித்தவள் மாதிரி ஒரு நடை நடந்து, வீட்டை விட்டு வெளியேறினாள். நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன். பிரசன்டேஷன் செர்மனி பார்த்துக்கொண்டே சீனியரின் காலுக்காக வெயிட் பண்ணினேன். கால் வந்ததும் மொட்டை மாடிக்கு சென்று, பிக்கப் செய்து பேசினேன். சந்தோஷத்தில் கத்தினேன்.

"ஹாய் சீனியர்.. கலக்கிட்டீங்க சீனியர்.." 

"என்ன ஜூனியர்.. இந்தியா வின் பண்ணிடுச்சா..?"

"வின்னோ வின்னுன்னு வின் பண்ணிடுச்சு.. என்னால நம்பவே முடியலை.."

"இப்போவாவது என் மேல நம்பிக்கை வந்ததா..?"

"நம்பிக்கை வந்ததாவா..? தெய்வம் சீனியர் நீ..!! இனிமே நீ என்ன சொன்னாலும்.. கண்ணை மூடிக்கிட்டு நான் அதை நம்புவேன்..!!"

"ஹாஹா.. இந்தியா வின் பண்ணினதுல ரொம்ப சந்தோஷமா இருக்குற போல..?"

"ஆமாம் சீனியர்.. ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்குறேன்..!! அதே மாதிரி உனக்கும் நான் ஒரு ஹேப்பி ந்யூஸ் வச்சிருக்கேன்.."

"எனக்கு ஹேப்பி ந்யூஸா..? என்னது அது..?" அவருடைய குரலில் ஏகப்பட்ட ஆர்வம்.

"உன் பேங்க் பேலன்ஸ் அஞ்சரை கோடி அப்பீஸ்னு சொன்னியே.. இப்போ அதுல ஒரு ஐநூறு ஆட் ஆகியிருக்கும்.. செக் பண்ணிப் பாரு.."

"என்ன சொல்ற நீ..? என் பேங்க் பேலன்ஸ் நாலே கால் கோடி அப்பீஸ்தான..?" அவர் சொல்ல, இப்போது நான் சற்று குழம்பினேன்.

"நே..நேத்து அஞ்சரை கோடின்னு சொன்னியேயா..??"

"அப்படியா சொன்னேன்..??? ம்ம்ம்ம்ம்ம்...." என்று கொஞ்ச நேரம் சிந்தனையில் ஆழ்ந்த சீனியர், பின்பு சீரியசான குரலில் கத்தினார்.

"ஹேய்.. இப்போ எனக்கு புரியுது..!! என் ஃபினான்ஷியல் ப்ளாக் இம்பாக்ட் ஆற மாதிரி.. நீ பாஸ்ட்ல ஏதோ வேலை பண்ணிருக்குற..? என்ன அது..? ஐநூறு அப்பீஸ் ஆட் ஆகும்னு சொன்னியே என்னது அது..??"

"அ..அது.. இந்தியா இன்னைக்கு வின் பண்ணுதுன்னு பிங்கிட்ட பெட் கட்டி ஐநூறு ருப்பீஸ் ஜெயிச்சேன்.. அது உன் பேங்க் பேலன்ஸ்ல ஆட் ஆகும்னு நெனச்சேன்.." நான் தயங்கி தயங்கி சொல்ல சீனியர் சிரித்தார்.

"ஹஹாஹா...!! உனக்கு புரியலை ஜூனியர்.. இட் வோன்ட் வொர்க் இன் தட் வே..!!"

"அப்புறம்..?"

"சொல்றேன்.. நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளு ஜூனியர்..!! நீ பெட் கட்டி ஐநூறு ருப்பீஸ் ஜெயிச்சதால.. என்னோட கடந்த காலத்தை சேன்ஜ் பண்ணி.. ஒரு ஃபினான்ஷியல் இம்பாக்ட் கொடுத்திருக்குற..!! அந்த இம்பாக்ட் ஃப்யூச்சர்ல ரெஃப்லக்ட் ஆகுறப்போ.. பாசிட்டிவாவும் இருக்கலாம்.. நெகடிவாவும் இருக்கலாம்..!! இந்த கேஸ்ல நெகடிவா ஆகிடுச்சு.. என்னோட ஒரிஜினல் பேங்க் பேலன்ஸ் குறைஞ்சு போச்சு..!! இனிமே எங்கிட்ட கேட்காம.. இந்த மாதிரி வேலைலாம் நீ பண்ணக் கூடாது.. சரியா..?"

"ஓ..!!!! ஸாரி சீனியர்..!! உன் பேங்க் பேலன்ஸ் கம்மியாக நான் காரணமாயிட்டேன்..!! கோடி அப்பீஸ் கொறைஞ்சு போச்சேன்னு ஃபீல் பண்ணுறியா சீனியர்..?"

"ஹாஹா.. இல்ல ஜூனியர்..!! என் பேங்க் பேலன்ஸ் நாலே கால் கோடி அப்பீஸ்தான்னு என் மெமரி எப்போவோ அப்டேட் ஆயிடுச்சு.. அஞ்சரை கோடின்றது எதோ கனவு கண்ட மாதிரிதான் என் மெமரில இருக்குது.. அதனால ரொம்பலாம் நான் ஃபீல் பண்ணல..!!"

"அது எப்படி..?"



"அதுலாம்.. ரியல்லி காம்ப்ளிகேட்டட் டூ எக்ஸ்ப்ளெயின் ஜூனியர்..!! பேரலல் யுனிவர்ஸ்.., பட்டர்ஃப்ளை எஃபக்ட்.., ஆல்டர்னேட் ஹிஸ்டரி.., அப்டேஷன் ஆஃப் மெமரின்னு.. நெறைய ஃபினாமினா இருக்கு..!!"

"என்னது.. பிலோமினாவா..?"

"பிலோமினா இல்ல ஜூனியர்.. ஃபினாமினா..!!"

"ஓஹோ..?? எனக்கு இன்னும் ஒரு விஷயம் புரியலை.. நான் இப்போ உன்கிட்ட பேசிட்டு இருக்குறது கூட பாஸ்ட்டை சேன்ஜ் பண்றதுதான..? அதனால உனக்கு எதுவும் இம்பாக்ட் இருக்காதா..?"

"இம்பாக்டோட அளவை பொறுத்துதான் ஃப்யூச்சர்ல எஃபக்ட் இருக்கும் ஜூனியர்..!! இப்போ என்கூட நீ பேசலைன்னா என்ன பண்ணிருந்திருப்ப..? சும்மா ரூம்ல படுத்திருந்திருப்ப..!! ஸோ.. அதனாலலாம் ஃப்யூச்சர்ல பெரிய எஃபக்ட் வந்திடாது..!!"

"ம்ஹூம்.. சுத்தமா புரியலை..!!"

"இரு.. புரியுற மாதிரியே சொல்றேன்..!! உனக்கு நெட்வொர்க்ஸ் சப்ஜக்ட் எடுப்பானே.. ஒரு டப்பா தலையன்.. அவன் பேரு கூட ரொம்ப நீளமா இருக்குமே.."

"ம்ம்.. கோவிந்த நமசிவாய அரோகர ஐயப்பன்..!!"

"அவன் நாளைக்கு க்ளாஸ் எடுக்குறேன்ற பேர்ல நல்லா மொக்கை போடப் போறான்னு நான் உன்கிட்ட சொல்றேன்னு வச்சுக்கோ.. அதைக்கேட்டுட்டு நீ நாளைக்கு க்ளாஸ்ல படுத்து தூங்கிட்டேனா.. அதனால எனக்கு ஃப்யூச்சர்ல எதுவும் ப்ராப்ளம் இல்லை.."

"ஓ..!! அவன் க்ளாசை கவனிக்குறதும் ஒண்ணுதான்.. தூங்குறதும் ஒண்ணுதான்.. ஃப்யூச்சருக்கு யூஸ் ஆகாதுன்னு சொல்ற..?"

"ஆமாம்..!! அதே நேரம்.. அவன் போடுற மொக்கை தாங்காம.. அவன் டப்பா மண்டையை நீ ரெண்டா பொளந்துட்டேன்னு வச்சுக்கோ.. அது போலீஸ் கேஸ் ஆயிடும்.. அதனால என் ஃப்யூச்சரும் ரொம்ப பாதிச்சிடும்..!! உன்கிட்ட இப்போ கால் பண்ணி பேசிட்டு இருக்குறதுக்கு பதிலா.. கம்பி கூட எண்ணிட்டு இருக்கலாம்..!! இப்போ புரியுதா..?"

"ம்ம்.. புரியுது..!! கடந்த காலத்தை மாத்திட கூடாதுன்னு சொல்ல வர்ற.."

"இல்ல அசோக்..!! கடந்த காலத்தை மாத்தக் கூடாதுன்னு சொல்லல..!! மாத்துறதுக்கு முன்னாடி கவனமா இருக்கணும்னு சொல்றேன்..!! சொல்லப்போனா.. என்னோட கடந்த காலத்தை மாத்துறதுக்காகத்தான்.. இவ்ளோ கஷ்டப்பட்டு இப்படி ஒரு மெசினையே நான் கண்டுபிடிச்சேன்..!! ஆனா.. அதை என்னால மட்டும் மாத்த முடியாது.. உன்னோட ஹெல்ப் வேணும்..!!"

"உனக்காக நான் என்ன வேணா பண்ணுவேன் சீனியர்.. என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு.."

"சொல்றேன்.. ஆனா நீ டென்ஷன் ஆகாம.. நான் சொல்றதை பொறுமையா கேட்கனும்..!!" அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு இப்போது நிஜமாகவே லேசாக டென்ஷன் ஏற ஆரம்பித்தது.

"என்னய்யா சொல்ற..? நீ சொல்றதைப் பாத்தா.. ஏதோ ஒரு பெரிய மேட்டர் சொல்லப் போற போல..?"

"ஆமாம்.. கொஞ்சம் சீரியசான மேட்டர்தான்..!!"

"இரு.. நான் ஒரு தம் பத்த வச்சுக்குறேன்..!! அதுதான் டென்ஷனுக்கு வசதியா இருக்கும்..!!" நான் சொல்லிக்கொண்டே பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து என் உதட்டில் பொருத்தினேன்.

"உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும் ஜூனியர்.."

"சொல்லு சீனியர்.." சொல்லிக்கொண்டே நான் சிகரெட்டை பற்ற வைத்தேன்.

"இந்த தம் அடிக்கிறதை கொஞ்சம் கொறைச்சுக்கோ.. முடிஞ்சா சுத்தமா விட்டுடு..!!"

"ஏன் சீனியர்..? நான் தம்மடிக்கிறதுல உனக்கு என்ன பிரச்னை..??" நான் புரியாமல் கேட்க,

"இல்ல ஜூனியர்.. இப்போலாம் எனக்கு எந்திரிக்க கொஞ்சம் லேட் ஆகுது..!!"


அவர் பரிதாபமாக சொன்னார். அவருடைய குரலிலேயே அவர் படும் கஷ்டம் எனக்கு தெளிவாக புரிந்தது. ஆனால் அவருக்கு என்ன பதில் சொல்வதென்றுதான் எனக்கு எதுவும் விளங்கவில்லை. ஒரு வழியாய் சாந்தமாக சொன்னேன்.

"ஓகே சீனியர்.. கொறைச்சிக்கிறேன்..!! நீ மேட்டருக்கு வா..!!"

"அ..அது.. அது.. இந்த மேட்டர்.. லே..லேகா சம்பந்தப்பட்டது..!!" அவர் தயங்கி தயங்கி சொல்ல, நான் ஆச்சரியமானேன்.

"லேகாவா..? லேகாவை உனக்கு தெரியுமா..?"

"தெரியுமாவா..? அவ கூடத்தான் இருபத்து நாலு வருஷமா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்குறேன் ஜூனியர்..!!"

அவர் சொன்னதைக் கேட்க எனக்கு எக்கச்சக்க சந்தோஷமாய் இருந்தது. நான் இப்போது புதிதாக உற்சாகம் கிளம்பியவனாய் கேட்டேன்.

"ஹையோ சீனியர்.. சொல்லவே இல்ல..!! ச்சே.. உன்கூட இவ்வளவு பேசிட்டு.. இந்த முக்கியமான மேட்டரையே கேட்காம விட்டுட்டனே..?? ம்ம்ம்ம்... அப்போ.. லேகாதான் நம்ம பொண்டாட்டியா..?" 

"ச்சீய்... அசிங்கமா பேசாத ஜூனியர்..!!"

"அசிங்கமாவா..? நான் கரெக்டாத்தான பேசுறேன்..??"

"நீ சொன்னதுல பொருட்குற்றம் இல்ல.. ஆனா சொற்குற்றம் இருக்கு..!! 'நம்ம பொண்டாட்டியா..?' ன்னு நீ கேக்குறது நாராசமா என் காதுல விழுது.."

"அதானால என்ன சீனியர்.. நமக்குள்ளதான பேசிக்கிறோம்..? வேற யாராவது கேட்டாத்தான் தப்பா எடுத்துக்குவாங்க..!! ம்ம்ம்.. அப்புறம்.. நமக்கும் லேகாவுக்கும் எத்தனை கொழந்தைங்க பொறந்துச்சு..?"

"ஒரே ஒரு பையன்தான்..!!"

"ஓஹோ..? என்ன பண்றான் இப்போ..?"

"சந்திர மண்டலத்துல.. ஒரு சாப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்ணுறான்..!!"

"சந்திர மண்டலத்துலையா..? என்னய்யா சொல்ற..??" நான் நம்பமுடியாமல் கேட்டேன்.

"இதையே நம்ப மட்டேன்றியே.. அவன் யூ.கே.ஜி படிக்கிறதுக்கு யூ.கே போனான்னு சொன்னா.. நீ நம்புவியா..?"

"சத்தியமா நம்ப முடியலைய்யா..!!"

"ம்ம்ம்.. உலகம் இப்போ ரொம்ப சுருங்கிப் போச்சு ஜூனியர்.."

"ம்ம்ம்.. சரி சீனியர்..!! லேகாவைப் பத்தி ஏதோ மேட்டர்னு சொன்னியே.. என்ன அது..?"

"நான் சொல்றேன்.. ஆனா அவசரப் பட்டு என்னை நீ திட்டக் கூடாது..!!"

"சேச்சே.. அது உன்னைப் பத்தி தெரியிறதுக்கு முன்னாடி.. உன்னை லூசுன்னு திட்டிருப்பேன்.. அதுலாம் நீ மனசுள் வச்சுக்காத..!! இனிமே உன்னை நான் அந்த மாதிரி திட்ட மாட்டேன்..!! தைரியமா சொல்லு..!!"

"அ..அது.. அது.."

"ம்ம்ம்ம்...??"

"அ..அது.. அது வந்து.." சீனியர் தயங்கினார்.

"ம்ம்ம்.. சொல்லு சீனியர்.. ஏன் இப்படி தயங்குற..?" நான் அவரை தூண்டினேன்.

"லே..லேகாவை"

"ம்ம்.. லேகாவை..?"

"லேகாவை நீ கழட்டி விட்டுடனும்..!!"

என் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை என்னால் நம்பவே முடியவில்லை. என்ன சொல்லுகிறான் இந்த ஆள்..? சுய நினைவுடன்தான் சொல்கிறானா..? இல்லை போதையில் உளறுகிறானா..? திரும்ப ஒருமுறை கேட்டேன். இப்போது என் வார்த்தைகளில் எக்கச்சக்க டென்ஷன்..!!

"யோவ்.. என்னய்யா சொல்ற நீ..?"

"ஆ..ஆமாம் அசோக்.. லேகாவை நீ கழட்டி விடனும்..!! அவ நமக்கு வேணாம் அசோக்..!!"

சீனியர் தெள்ளத்தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்ல.. நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்..!!

No comments:

Post a Comment